HomeUncategorizedThirukural 1161 of 1330 - திருக்குறள் 1161 of 1330

Thirukural 1161 of 1330 – திருக்குறள் 1161 of 1330

Thirukural
1161 of 1330 –
திருக்குறள் 1161 of 1330

thirukural
குறள் பால் : காமத்துப்பால். குறள் இயல் : கற்பியல். அதிகாரம் : படர்மெலிந்திரங்கல்.
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.
Translation:
I would my pain conceal, but see! it
surging swells,
As streams to those that draw from
ever-springing wells.
Explanation:
I would hide this pain from others; but it
(only) swells like a spring to those who drain it.
கலைஞர் உரை:
இறைக்க இறைக்கப் பெருகும் ஊற்றுநீர் போல, பிறர் அறியாமல் மறைக்க மறைக்கக் காதல் நோயும் பெருகும்.

[ads-post]
மு. உரை:
இக் காமநோயைப் பிறர் அறியாமல் யான் மறைப்பேன், ஆனால் இது இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகுவது போல் மிகுகின்றது.
சாலமன் பாப்பையா உரை:
என் காதல் துன்பத்தை மற்றவர் அறிந்துவிடக்கூடாது என்று மறைக்கவே செய்தேன்; ஆனாலும் இறைக்க இறைக்க ஊற்றுநீர் பெருகுவது போல மறைக்க மறைக்க என் துன்பமும் பெருகவே செய்கிறது.
மணக்குடவர் உரை:
இந்நோயை யான் மறைப்பேன்; மறைப்பவும் இஃது இறைப்பார்க்கு ஊற்றுநீர்போல மிகாநின்றது. தலைமகள் ஆற்றாமை கண்டு இதனை இவ்வாறு புலப்பட விடுத்தல் தகாதென்று தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிமேலழகர் உரை:
(காமநோயை வெளிப்படுத்தல் நின் நாணுக்கு ஏலாது என்ற தோழிக்குச் சொல்லிது.) நோயை யான் மறைப்பேன்இந்நோயைப் பிறரறிதல் நாணி யான் மறையா நின்றேன்; இஃதோ இறைப்பவர்க்கு ஊற்று நீர் போல மிகும்நிற்பவும், இஃது அந்நாண்வரை நில்லாது நீர் வேண்டும் என்று இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகுமாறு போல மிகாநின்றது. (‘அம்மறைத்தலால் பயன் என்‘? என்பதுபட நின்றமையின், ‘மன்ஒழியிசைக்கண் வந்தது. ‘இஃதோ செல்வர்க் கொத்தனென் யான்என்புழிப் போல ஈண்டுச் சுட்டுப் பெயர் ஈறு திரிந்து நின்றது. ‘இஃதோர் நோயைஎன்று பாடம் ஓதுவாரும் உளர். அது பாடமன்மை அறிக. ‘இனி அதற்கடுத்தது நீ செயல் வேண்டும்என்பதாம்.]
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments