HomeUncategorizedThirukural 258 of 1330 - திருக்குறள் 258 of 1330

Thirukural 258 of 1330 – திருக்குறள் 258 of 1330

Thirukural
258 of 1330 –
திருக்குறள் 258 of 1330

thirukural
குறள் பால் :
அறத்துப்பால். குறள் இயல் :
துறவறவியல். அதிகாரம் :
புலான்மறுத்தல்.
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
Translation:
Whose souls the vision pure and passionless
perceive,
Eat not the bodies men of life bereave.
Explanation:
The wise, who have freed themselves from
mental delusion, will not eat the flesh which has been severed from an animal.
கலைஞர் உரை:
மாசற்ற மதியுடையோர், ஓர் உயிரைப் பிரித்து அதன் ஊனை உண்ண மாட்டார்கள்.

[ads-post]
மு. உரை:
குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
பிழையற்ற அறிவினை உடையவர், உயிர் பிரிந்த இறைச்சியை உண்ணமாட்டார்.
மணக்குடவர் உரை:
குற்றத்தினின்று நீங்கின தெளிவுடையார் உண்ணார்; உயிரினின்று நீங்கின உடம்பை. இது மேற்கூறிய குற்றமெல்லாம் பயத்தலின் அதனைத் தெளிவுடையாருண்ணாரென்றது.
பரிமேலழகர் உரை:
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார்மயக்கம் ஆகிய குற்றத்தின் நீங்கிய அறிவினையுடையார், உயிரின் தலைப்பிரிந்த ஊன் உண்ணார்ஓர் உயிரின் நீங்கி வந்த ஊனை உண்ணார். ( ‘தலைப்பிரிவுஎன்பது ஒரு சொல். பிணம் என ஊனின் மெய்ம்மை தாமே உணர்தலின், ‘உண்ணார்என்றார்.).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments