HomeUncategorizedThirukural 306 of 1330 - திருக்குறள் 306 of 1330

Thirukural 306 of 1330 – திருக்குறள் 306 of 1330

Thirukural
306 of 1330 –
திருக்குறள் 306 of 1330

thirukural
குறள் பால் :
அறத்துப்பால். குறள் இயல் :
துறவறவியல். அதிகாரம் :
வெகுளாமை.
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.
Translation:
Wrath, the fire that slayeth whose draweth
near,
Will burn the helpful ‘raft’ of kindred
dear.
Explanation:
The fire of anger will burn up even the
pleasant raft of friendship.
கலைஞர் உரை:
சினங்கொண்டவரை அழிக்கக் கூடியதாகச் சினமென்னும் தீயே இருப்பதால், அது அவரை மட்டுமின்றி, அவரைப் பாதுகாக்கும் தோணி போன்ற சுற்றத்தையும் அழித்துவிடும்.

[ads-post]
மு. உரை:
சினம் என்னும் சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு ஒருவனுக்கு இனம் இன்பத் தெப்பத்தையும் சுட்டழிக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
சேர்ந்தவரைக் கொல்லி எனப்படும் கோபம், சேர்ந்தவரை மட்டும் அன்று; சேர்ந்தவர்க்குத் துணையாக இருப்பவரையும் எரித்துவிடும்.
மணக்குடவர் உரை:
சினமென்று சொல்லப் படுகின்ற நெருப்பு தான் துன்பக்கடலிலழுந்தாமல் தன்னைக் கரையேற விடுகின்ற நட்டோராகிய புணையைச் சுடும். சேர்ந்தாரைக் கொல்லிநெருப்பு: இது காரணக்குறி. இது சினம் தன்னை யடுத்தாரைக் கொல்லு மென்றது.
பரிமேலழகர் உரை:
சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லிசினம் என்னும் நெருப்பு; இனம் என்னும் ஏமப் புணையைச் சுடும்தனக்கு இடமானவரையே யன்றி அவர்க்கு இனமாகிய ஏமப்புணையையும் சுடும். (‘சேர்ந்தாரைக் கொல்லிஎன்பது ஏதுப் பெயர்: ‘தான்சேர்ந்த இடத்தைக் கொல்லும் தொழிலதுஎன்றவாறு. ‘சேர்ந்தாரைஎன உயர்திணைப் பன்மைமேல் வைத்து, ஏனை நான்கு பாலும் தம் கருத்தோடு கூடிய பொருளாற்றலால் கொண்டார். ஈண்டு உருவகம் செய்கின்றது துறந்தார் சினத்தையே ஆகலின், ‘சினமென்னும் நெருப்புஎன்ற விதப்பு, உலகத்து நெருப்புச் சுடுவது தான் சேர்ந்த இடத்தையே , இந்நெருப்புச் சேராத இடத்தையும் சுடும் என்னும் வேற்றுமை தோன்ற நின்றது. ஈண்டுஇனம்என்றது, முற்றத் துறந்து தவஞானங்களால் பெரியராய்க் கேட்டார்க்கு உறுதி பயக்கும் மொழிகளை இனியவாகச் சொல்லுவாரை .உருவகம் நோக்கிச்சுடும்என்னும் தொழில் கொடுத்தாராயினும், ‘அகற்றும்என்பது பொருளாகக் கொள்க. ஏமப்புணைஏமத்தை உபதேசிக்கும் புணை. ‘இனம்என்னும் ஏமப்புணை என்ற ஏகதேச உருவகத்தால், ‘பிறவிக் கடலுள் அழுந்தாமல் வீடு என்னும் கரையேற்றுகின்றஎன வருவித்து உரைக்க. எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. தன்னையும் வீழ்த்து, எடுப்பாரையும் அகற்றும் என்பதாம்.).
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments