குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : கல்வி.
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.
Translation:
You
meet with joy, with pleasant thought you part;
meet with joy, with pleasant thought you part;
Such
is the learned scholar’s wonderous art!.
is the learned scholar’s wonderous art!.
Explanation:
It
is the part of the learned to give joy to those whom they meet, and on leaving,
to make them think (Oh! when shall we meet them again).
is the part of the learned to give joy to those whom they meet, and on leaving,
to make them think (Oh! when shall we meet them again).
கலைஞர் உரை:
மகிழ்ச்சி பொங்கிடச் சேர்ந்து பழகுவதும், பிரிந்திட நேரும் போது மனங்கலங்குவதும் அறிவிற் சிறந்தோர் செயலாகும்.
[ads-post]
மு.வ உரை:
மகிழும் படியாகக் கூடிபழகி (இனி இவரை எப்போது காண்போம் என்று ) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.
சாலமன் பாப்பையா உரை:
மற்றவர்கள் கூடி வரும்போது, மனம் மகிழ அவர்களுடன் கலந்து பேசி, இனி இவரை எப்போது, எவ்வாறு சந்திக்கப் போகிறோம் என்று அவர்கள் எண்ணுமாறு பிரிவது கற்று அறிந்தவரின் செயல்.
மணக்குடவர் உரை:
மக்களிருவர் உவக்குமாறு கூடி அவர்
நினைக்குமாறு பிரிதல் போலும் : கற்றோர் செய்யுந்தொழில். இஃது இன்பம் நுகரினும்
வினை செய்யினும் பிறர்க்கும் இன்பம் பயக்கச் செய்தல் கல்வியாலாமென்றது.
நினைக்குமாறு பிரிதல் போலும் : கற்றோர் செய்யுந்தொழில். இஃது இன்பம் நுகரினும்
வினை செய்யினும் பிறர்க்கும் இன்பம் பயக்கச் செய்தல் கல்வியாலாமென்றது.
பரிமேலழகர் உரை:
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே – யாவரையும். அவர் உவக்குமாறு தலைப்பெய்து, இனி இவரை யாம் எங்ஙனம் கூடுதும்? என நினையுமாறு
நீங்குதலாகிய அத்தன்மைத்து,
புலவர் தொழில் – கற்றறிந்தாரது தொழில். (தாம் நல்வழி ஒழுகல் பிறர்க்கு உறுதி
கூறல் என்பன இரண்டும் தொழில் என ஒன்றாய் அடங்குதலின், ‘அத்தன்மைத்து‘ என்றார்.
அத்தன்மை: அப்பயனைத் தரும் தன்மை. நல்லொழுக்கம் காண்டலானும், தமக்கு மதுரமும்
உறுதியுமாய கூற்றுக்கள் நிகழ்வு எதிர்வுகளின் இன்பம் பயத்தலானும் கற்றார்மாட்டு
எல்லாரும் அன்புடையராவர் என்பதாம். இதனால் கற்றாரது உயர்வு வகுத்துக்
கூறப்பட்டது.)
அனைத்தே – யாவரையும். அவர் உவக்குமாறு தலைப்பெய்து, இனி இவரை யாம் எங்ஙனம் கூடுதும்? என நினையுமாறு
நீங்குதலாகிய அத்தன்மைத்து,
புலவர் தொழில் – கற்றறிந்தாரது தொழில். (தாம் நல்வழி ஒழுகல் பிறர்க்கு உறுதி
கூறல் என்பன இரண்டும் தொழில் என ஒன்றாய் அடங்குதலின், ‘அத்தன்மைத்து‘ என்றார்.
அத்தன்மை: அப்பயனைத் தரும் தன்மை. நல்லொழுக்கம் காண்டலானும், தமக்கு மதுரமும்
உறுதியுமாய கூற்றுக்கள் நிகழ்வு எதிர்வுகளின் இன்பம் பயத்தலானும் கற்றார்மாட்டு
எல்லாரும் அன்புடையராவர் என்பதாம். இதனால் கற்றாரது உயர்வு வகுத்துக்
கூறப்பட்டது.)




