குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : கேள்வி.
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.
Translation:
Who
feed their ear with learned teachings rare,
feed their ear with learned teachings rare,
Are
like the happy gods oblations rich who share.
like the happy gods oblations rich who share.
Explanation:
Those
who in this world enjoy instruction which is the food of the ear, are equal to
the Gods, who enjoy the food of the sacrifices.
who in this world enjoy instruction which is the food of the ear, are equal to
the Gods, who enjoy the food of the sacrifices.
கலைஞர் உரை:
குறைந்த உணவருந்தி நிறைந்த அறிவுடன் விளங்கும் ஆன்றோர்க்கு ஒப்பாகக் கேள்வி ஞானம் எனும் செவியுணவு அருந்துவோர் எண்ணப்படுவர்.
[ads-post]
மு.வ உரை:
கற்றவரின் செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே ஆயினும் அவி உணவைக் கொள்ளும் தேவரோடு ஒப்பாவார்.
சாலமன் பாப்பையா உரை:
செவி உணவாகிய கேள்வியைப் பெற்றிருப்பவர் இப்பூமியில் வாழ்பவரே என்றாலும், வேள்வித் தீயில் கொடுக்கப்படும் நெய் முதலிய உணவைப் பெறும் விண்ணுலகத் தேவர்க்குச் சமமாவர்.
மணக்குடவர் உரை:
செவிக்கு உணவு போன்ற கேள்வியை
யுடையவர் நிலத்தின் கண்ணே யிருப்பினும் அவியை யுணவாக வுடைய தேவரோடு ஒப்பர்.
யுடையவர் நிலத்தின் கண்ணே யிருப்பினும் அவியை யுணவாக வுடைய தேவரோடு ஒப்பர்.
பரிமேலழகர் உரை:
செவி உணவின் கேள்வி உடையார் –
செவியுணவாகிய கேள்வியினை உடையார், நிலத்து அவியுணவின் ஆன்றாரொடு ஒப்பர் – நிலத்தின்கண்ணர் ஆயினும்
அவியுணவினையுடைய தேவரோடு ஒப்பர். (செவி உணவு : செவியான் உண்ணும் உணவு. அவ்வழிக்கண்
வந்த இன்சாரியையது னகரம் வலிந்து நின்றது. அவியாகிய உணவு – தேவர்க்கு வேள்வித்
தீயில் கொடுப்பன. அறிவான் நிறைந்தமையான் ‘ஆன்றார்‘, என்றும், துன்பம் அறியாமையான் தேவரொடு ஒப்பர் என்றும்
கூறினார். இதனான் அதனை உடையாரது சிறப்புக் கூறப்பட்டது.)
செவியுணவாகிய கேள்வியினை உடையார், நிலத்து அவியுணவின் ஆன்றாரொடு ஒப்பர் – நிலத்தின்கண்ணர் ஆயினும்
அவியுணவினையுடைய தேவரோடு ஒப்பர். (செவி உணவு : செவியான் உண்ணும் உணவு. அவ்வழிக்கண்
வந்த இன்சாரியையது னகரம் வலிந்து நின்றது. அவியாகிய உணவு – தேவர்க்கு வேள்வித்
தீயில் கொடுப்பன. அறிவான் நிறைந்தமையான் ‘ஆன்றார்‘, என்றும், துன்பம் அறியாமையான் தேவரொடு ஒப்பர் என்றும்
கூறினார். இதனான் அதனை உடையாரது சிறப்புக் கூறப்பட்டது.)




