குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : கேள்வி.
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.
Translation:
Like
staff in hand of him in slippery ground who strays
staff in hand of him in slippery ground who strays
Are
words from mouth of those who walk in righteous ways.
words from mouth of those who walk in righteous ways.
Explanation:
The
words of the good are like a staff in a slippery place.
words of the good are like a staff in a slippery place.
கலைஞர் உரை:
வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல் ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்.
[ads-post]
மு.வ உரை:
கல்லாதவன் ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் உடைய சேற்று நிலத்தில் ஊன்றுகோல் போல் வாழ்க்கையில் உதவும்.
சாலமன் பாப்பையா உரை:
கற்று, ஒழுக்கம் மிக்கவரின் வாயிலிருந்து பிறந்த சொற்கள் வழுக்கும் தரையில் ஊன்றுகோல் உதவுவது போல் துன்ப நேரத்தில் உதவும்.
மணக்குடவர் உரை:
வழுக்குத லுண்டான விடத்து உதவும்
ஊன்றுகோல் போலும்: ஒழுக்கமுடையார் கூறுஞ் சொற்கள். இது கேட்பது
ஒழுக்கமுடையார்மாட்டென்பது கூறிற்று.
ஊன்றுகோல் போலும்: ஒழுக்கமுடையார் கூறுஞ் சொற்கள். இது கேட்பது
ஒழுக்கமுடையார்மாட்டென்பது கூறிற்று.
பரிமேலழகர் உரை:
இழுக்கல் உடை உழி ஊற்றுக்கோல்
அற்று = வழுக்குதலையுடைய சேற்று நிலத்து இயங்குவார்க்கு ஊன்றுகோல் போல உதவும்; ஒழுக்கம் உடையார்
வாய்ச்சொல் – காவற்சாகாடு உகைப்பார்க்கு ஒழுக்கமுடையார் வாயிற் சொற்கள்.
(அவாய்நிலையான் வந்த உவமையடையால் பொருள் அடைவருவிக்கப்பட்டது. ஊற்றாகிய கோல் போல
உதவுதல் -தளர்ந்துழி அதனை நீக்குதல். கல்வியுடையரேனும் ஒழுக்கம் இல்லாதார்
அறிவிலராகலின், அவர்
வாய்ச்சொல் கேட்கப்படாது என்பதுதோன்ற, ‘ஒழுக்கமுடையார் வாய்ச்சொல்‘ ‘வாய்‘என்பது
தீச்சொல்அறியாமையாகிய சிறப்புணர நின்றது. ‘அவற்றைக் கேட்க‘ என்பதுகுறிப்பெச்சம்.)
அற்று = வழுக்குதலையுடைய சேற்று நிலத்து இயங்குவார்க்கு ஊன்றுகோல் போல உதவும்; ஒழுக்கம் உடையார்
வாய்ச்சொல் – காவற்சாகாடு உகைப்பார்க்கு ஒழுக்கமுடையார் வாயிற் சொற்கள்.
(அவாய்நிலையான் வந்த உவமையடையால் பொருள் அடைவருவிக்கப்பட்டது. ஊற்றாகிய கோல் போல
உதவுதல் -தளர்ந்துழி அதனை நீக்குதல். கல்வியுடையரேனும் ஒழுக்கம் இல்லாதார்
அறிவிலராகலின், அவர்
வாய்ச்சொல் கேட்கப்படாது என்பதுதோன்ற, ‘ஒழுக்கமுடையார் வாய்ச்சொல்‘ ‘வாய்‘என்பது
தீச்சொல்அறியாமையாகிய சிறப்புணர நின்றது. ‘அவற்றைக் கேட்க‘ என்பதுகுறிப்பெச்சம்.)




