குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : கேள்வி.
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.
Translation:
Let
each man good things learn, for e’en as he
each man good things learn, for e’en as he
Shall
learn, he gains increase of perfect dignity.
learn, he gains increase of perfect dignity.
Explanation:
Let
a man listen, never so little, to good (instruction), even that will bring him
great dignity.
a man listen, never so little, to good (instruction), even that will bring him
great dignity.
கலைஞர் உரை:
நல்லவற்றை எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.
[ads-post]
மு.வ உரை:
எவ்வளவு சிறிதே ஆயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும், கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும்.
சாலமன் பாப்பையா உரை:
சிறிது நேரமே என்றாலும் உறுதி தரம் நற்பொருளைக் கேட்க வேண்டும். அதுகூட நிறைந்த பெருமையைத் தரும்.
மணக்குடவர் உரை:
எவ்வளவிற்றாயினும் நல்ல நூல்களைக்
கேட்க; அக்கேள்வி
அவ்வளவிற்றே யாயினும் நிரம்பின பெருமையைத் தரும். இஃது எல்லாக்காலமுங்
கேட்டிலனாயினும், கேட்குங்கால்
நல்ல கேட்க வேண்டுமென்றது.
கேட்க; அக்கேள்வி
அவ்வளவிற்றே யாயினும் நிரம்பின பெருமையைத் தரும். இஃது எல்லாக்காலமுங்
கேட்டிலனாயினும், கேட்குங்கால்
நல்ல கேட்க வேண்டுமென்றது.
பரிமேலழகர் உரை:
எனைத்தானும் நல்லவை கேட்க – ஒருவன்
சிறிதாயினும் உறுதிப் பொருள்களைக் கேட்க, அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் – அக்கேள்வி
அத்துணையாயினும் நிறைந்த பெருமையைத் தரும் ஆகலான். (‘எனைத்து‘ , ‘அனைத்து‘ என்பன கேட்கும்
பொருள்மேலும் காலத்தின்மேலும் நின்றன. அக்கேள்வி மழைத்துளிபோல வந்து ஈண்டி எல்லா
அறிவுகளையும் உள ஆக்கலின்,
‘சிறிது‘ என்று
இகழற்க என்பதாம்.)
சிறிதாயினும் உறுதிப் பொருள்களைக் கேட்க, அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் – அக்கேள்வி
அத்துணையாயினும் நிறைந்த பெருமையைத் தரும் ஆகலான். (‘எனைத்து‘ , ‘அனைத்து‘ என்பன கேட்கும்
பொருள்மேலும் காலத்தின்மேலும் நின்றன. அக்கேள்வி மழைத்துளிபோல வந்து ஈண்டி எல்லா
அறிவுகளையும் உள ஆக்கலின்,
‘சிறிது‘ என்று
இகழற்க என்பதாம்.)




