HomeUncategorizedThirukural 418 of 1330 - திருக்குறள் 418 of 1330

Thirukural 418 of 1330 – திருக்குறள் 418 of 1330

Thirukural
418 of 1330 –
திருக்குறள் 418 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : கேள்வி.
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.
Translation:
Where
teaching hath not oped the learner’s ear,
The
man may listen, but he scarce can hear.
Explanation:
The
ear which has not been bored by instruction, although it hears, is deaf.
கலைஞர் உரை:
இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும்.

[ads-post]

மு. உரை:
கேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள், ( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே.
சாலமன் பாப்பையா உரை:
கேள்வி ஞானத்தால் துளைக்கப்படாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும் அவை செவிட்டுத் தன்மையவே.
மணக்குடவர் உரை:
ஓசை மாத்திரம் கேட்டனவாயினும்
அதுவுங் கேளாத செவி போலும்
;
நல்லோர் கூறுஞ் சொற்களால் துளைக்கப்படாத செவி. இது கேள்வியில்லாதார் செவிட
ரென்றது.
பரிமேலழகர் உரை:
கேட்பினும் கேளாத் தகையவே – தம்
புலமாய ஓசை மாத்திரத்தைக் கேட்கும் ஆயினும் செவிடாம் தன்மையவேயாம்
, கேள்வியால்
தோட்கப்படாத செவி – கேள்வியால் துளைக்கப்படாத செவிகள். (ஏகாரம் தேற்றத்தின்கண்
வந்தது. ஓசை மாத்திரத்தான் உறுதி எய்தாமையின்
கேளாத்தகையஎன்றும், மனத்தின்கண் நூற்பொருள் நுழைதற்கு வழியாக்கலிற்
கேள்வியைக் கருவியாக்கியும் கூறினார்.
பழைய துளை துளையன்றுஎன்பதாம்.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments