HomeUncategorizedThirukural 419 of 1330 - திருக்குறள் 419 of 1330

Thirukural 419 of 1330 – திருக்குறள் 419 of 1330

Thirukural
419 of 1330 –
திருக்குறள் 419 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : கேள்வி.
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது.
Translation:
‘Tis
hard for mouth to utter gentle, modest word,
When
ears discourse of lore refined have never heard.
Explanation:
It
is a rare thing to find modesty, a reverend mouth- with those who have not
received choice instruction.
கலைஞர் உரை:
தெளிவான கேள்வியறிவு இல்லாதவர்கள், அடக்கமாகப் பேசும் அமைதியான பண்புடையவர்களாக இருக்க இயலாது.

[ads-post]

மு. உரை:
நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமானச் சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது.
சாலமன் பாப்பையா உரை:
நுண்ணிய கேள்வி ஞானம் இல்லாதவர், பணிவுமிக்க சொற்களைப் பேசுபவராக ஆவது கடினம்.
மணக்குடவர் உரை:
நுண்ணியதாகிய கேள்வியை
யுடையாரல்லாதார்
, தாழ்ந்த
சொற்கூறும் நாவுடையாராதல் இல்லை. இது கேள்வியுடையார் தம்மை வியந்து சொல்லா
ரென்றது.
பரிமேலழகர் உரை:
நுணங்கிய கேள்வியர் அல்லார் –
நுண்ணியதாகிய கேள்வியுடையார் அல்லாதார்
, வணங்கிய வாயினர் ஆதல் அரிது – பணிந்த மொழியினை
உடையராதல் கூடாது. (கேட்கப்படுகின்ற பொருளினது நுண்மை கேள்விமேல் ஏற்றப்பட்டது.
வாய்ஆகுபெயர்.
பணிந்தமொழி – பணிவைப்புலப்படுத்திய மொழி. கேளாதார் உணர்வு இன்மையால் தம்மை வியந்து
கூறுவர் என்பதாம்.
அல்லால்என்பதூஉம்
பாடம்.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments