குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : வினைத்தூய்மை.
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.
Translation:
From action evermore thyself restrain
Of glory and of good that yields no gain.
Explanation:
Ministers should at all times avoid acts
which, in addition to fame, yield no benefit (for the future).
which, in addition to fame, yield no benefit (for the future).
கலைஞர் உரை:
புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும்.
[ads-post]
மு.வ உரை:
புகழையும் அறத்தையும் தாராத (தூய்மை அற்ற) செயல்களை எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
இம்மைக்குப் புகழையும் மறுமைக்கு நன்மையையும் தராத செயல்களை எந்தக் காலத்திலும் விட்டுவிட வேண்டும்.
மணக்குடவர் உரை:
எல்லாக் காலமும் தவிர்தல் வேண்டும், புகழொடு நன்மை
பயவாத வினையை என்று மென்றது செயலற்ற காலமுமென்றது.
பயவாத வினையை என்று மென்றது செயலற்ற காலமுமென்றது.
பரிமேலழகர் உரை:
புகழொடு நன்றி பயவா வினை – தம் அரசனுக்கு
இம்மைக்கண் புகழும் மறுமைக்கண் அறமும் பயவாத வினைகளை; என்றும் ஒருவுதல்
லேண்டும் – அமைச்சர்க்கு
எக்காலத்தும் ஒழிதல் வேண்டும். (பெருகல், சுருங்கல், இடைநிற்றல் என்னும் நிலைவேறுபாடு காலத்தான் வருதலின், ‘என்றும்‘ என்றார். ‘வேண்டும்‘ என்பது ஈண்டு
இன்றியமையாது என்னும் பொருட்டு.)
இம்மைக்கண் புகழும் மறுமைக்கண் அறமும் பயவாத வினைகளை; என்றும் ஒருவுதல்
லேண்டும் – அமைச்சர்க்கு
எக்காலத்தும் ஒழிதல் வேண்டும். (பெருகல், சுருங்கல், இடைநிற்றல் என்னும் நிலைவேறுபாடு காலத்தான் வருதலின், ‘என்றும்‘ என்றார். ‘வேண்டும்‘ என்பது ஈண்டு
இன்றியமையாது என்னும் பொருட்டு.)




