HomeUncategorizedThirukural 656 of 1330 - திருக்குறள் 656 of 1330

Thirukural 656 of 1330 – திருக்குறள் 656 of 1330

Thirukural
656 of 1330 –
திருக்குறள் 656 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : வினைத்தூய்மை.
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.
Translation:
Though her that bore thee hung’ring thou
behold, no deed
Do thou, that men of perfect soul have
crime decreed.
Explanation:
Though a minister may see his mother
starve; let him do not act which the wise would (treat with contempt).
கலைஞர் உரை:
பசியால் துடிக்கும் தனது தாயின் வேதனையைத் தணிப்பதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபடக்கூடாது.

[ads-post]
மு. உரை:
பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்றச் செயல்களைச் செய்யக்கூடாது.
சாலமன் பாப்பையா உரை:
தன்னைப் பெற்றவனின் பசியைக் காண நேர்ந்தாலும் அதைப் போக்கப் பெருமக்கள் பழிக்கும் செயல்களைச் செய்யாது விடுக.
மணக்குடவர் உரை:
தன்னைப் பயந்தாள் பசிகண்டானாயினும்
சான்றோரால் பழிக்கப்படும் வினையைச் செய்யாதொழிக
. இது நல்லோர் பழிக்கும் வினையைத் தவிர்க
என்றது
.
பரிமேலழகர் உரை:
ஈன்றாள் பசி காண்பான் ஆயினும்தன்னைப்
பயந்தாளது பசியை வறுமையால் கண்டு இரங்கும் தன்மையினான் எனினும்
; சான்றோர்
பழிக்கும் வினை செய்யற்க

அது சுட்டி அறிவுடையார் பழிக்கும் வினைகளை ஒருவன் செய்யாதொழிக. (‘இறந்த மூப்பினராய
இருமுதுகுரவரும் கற்புடை மனைவியும் குழவியும் பசியான் வருந்தும் எல்லைக்கண் தீயன
பலவுஞ் செய்தாயினும் புறந்தருக
என்னும் அறநூற்பொது விதி, பொருள்நூல் வழி ஒழுகுதலும், அரசர் தொழிற்கு
உரியராதலும்
, நன்கு
மதிக்கற்பாடும் உடைய அமைச்சர்க்கு எய்தாமை பற்றி
, இவ்வாறு கூறினார். இவை ஐந்து
பாட்டானும்
, ‘பாவமும்
பழியும் பயக்கும் வினை செய்யற்க
என்பது கூறப்பட்டது.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments