HomeUncategorizedThirukural 665 of 1330 - திருக்குறள் 665 of 1330

Thirukural 665 of 1330 – திருக்குறள் 665 of 1330

Thirukural
665 of 1330 –
திருக்குறள் 665 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : வினைத்திட்பம்.
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்.
Translation:
The power in act of men renowned and great,
With king acceptance finds and fame through
all the state.
Explanation:
The firmness in action of those who have
become great by the excellence (of their counsel) will, by attaining its
fulfilment in the person of the king, be esteemed (by all).
கலைஞர் உரை:
செயல் திறனால் சிறப்புற்ற மாண்புடையவரின் வினைத் திட்பமானது, ஆட்சியாளரையும் கவர்ந்து பெரிதும் மதித்துப் போற்றப்படும்.

[ads-post]
மு. உரை:
செயல் திறனால் பெருமைபெற்று உயர்ந்தவரின் வினைத் திட்பமானது நாட்டை ஆளும் அரசனிடத்திலும் எட்டி மதிக்கப்பட்டு விளங்கும்.
சாலமன் பாப்பையா உரை:
எண்ணங்களால் சிறந்து, பெருமை மிக்கவர்களின் செயல் உறுதி. அரசு வரை செல்வதால் மற்றவர்களாலும் மதிக்கப்படும்.
மணக்குடவர் உரை:
மிகுதியெய்தி மாட்சிமைப்பட்டாரது
வினைத் திட்பமானது அரசன்மாட்டு உறுதலையெய்தி எல்லாராலும் நினைக்கப்படும்
. இது வினைத்திட்ப
முடையாரை எல்லாரும் விரும்புவரென்றது
.
பரிமேலழகர் உரை:
வீறு எய்தி மாண்டார் வினைத்திட்பம்எண்ணத்தால்
சிறப்பெய்திப் பிற இலக்கணங்களாலும் மாட்சிமைப்பட்ட அமைச்சரது வினைத்திட்பம்
; வேந்தன்கண் ஊறு
எய்தி உள்ளப்படும்
வேந்தன்கண்ணே
உறுதலை எய்தலான்
, எல்லாரானும்
நன்கு மதிக்கப்படும்
. (வேந்தன்கண்
ஊறு எய்தல்
எடுத்த
வினை அதனான் முற்றுப்பெற்றுச் செல்வமும் புகழும் அவன் கண்ண ஆதல்
. ‘எய்தலான்என்பது திரிந்து
நின்றது
. உள்ளல்மதிப்பான்
மறைவாமை
. இதனான்
அதன் சிறப்புக் கூறப்பட்டது
.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments