குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : வினைத்திட்பம்.
எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.
Translation:
Whate’er men think, ev’n as they think, may
men obtain,
men obtain,
If those who think can steadfastness of
will retain.
will retain.
Explanation:
If those who have planned (an undertaking)
possess firmness (in executing it) they will obtain what they have desired even
as they have desired it.
possess firmness (in executing it) they will obtain what they have desired even
as they have desired it.
கலைஞர் உரை:
எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்.
[ads-post]
மு.வ உரை:
எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப்பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.
சாலமன் பாப்பையா உரை:
ஒன்றைச் செய்ய எண்ணியவர் அதைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற மனஉறுதியை உடையவராக இருந்தால், அடைய நினைத்தவற்றை எல்லாம் அவர் எண்ணப்படியே அடைவார்.
மணக்குடவர் உரை:
தாம் எண்ணிய பொருள்களை எண்ணினபடியே
பெறுவர்: அவ்வாறு எண்ணினவர்
அவ்வினையைச் செய்து முடிக்குந் திண்மையுடையாராகப் பெறுவாராயின். இது வினையின்கண்
திண்மை வேண்டு மென்றது.
பெறுவர்: அவ்வாறு எண்ணினவர்
அவ்வினையைச் செய்து முடிக்குந் திண்மையுடையாராகப் பெறுவாராயின். இது வினையின்கண்
திண்மை வேண்டு மென்றது.
பரிமேலழகர் உரை:
எண்ணிய எண்ணியாங்கு எய்துப – தாம் எய்த எண்ணிய
பொருள்கள் எல்லாவற்றையும் அவ்வெண்ணியவாறே எய்துவர்; எண்ணியார் திண்ணியராகப் பெறின் – எண்ணியவர்
அவற்றிற்கு வாயிலாகிய வினைக்கண் திண்மையுடையராகப் பெறின். (‘எளிதின் எய்துப‘ என்பார், ‘எண்ணியாங்கு
எய்துப‘என்றார். அவர் அவ்வாறல்லது
எண்ணாமையின் திண்ணியராகவே வினை முடியும். அது முடிய அவை யாவையும்கைகூடும் என்பது கருத்து. இதனான்
அஃதுடையார் எய்தும்பயன் கூறப்பட்டது.)
பொருள்கள் எல்லாவற்றையும் அவ்வெண்ணியவாறே எய்துவர்; எண்ணியார் திண்ணியராகப் பெறின் – எண்ணியவர்
அவற்றிற்கு வாயிலாகிய வினைக்கண் திண்மையுடையராகப் பெறின். (‘எளிதின் எய்துப‘ என்பார், ‘எண்ணியாங்கு
எய்துப‘என்றார். அவர் அவ்வாறல்லது
எண்ணாமையின் திண்ணியராகவே வினை முடியும். அது முடிய அவை யாவையும்கைகூடும் என்பது கருத்து. இதனான்
அஃதுடையார் எய்தும்பயன் கூறப்பட்டது.)




