Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 1381 - 1410 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 1381 – 1410 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 1381 – 1410 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

பண்டு உனக்குப் பரம சிவனாரும்
வில்வளைத்து மாலையிட விதியில் விதித்திருக்குச்
செல்லந்த மன்னன் தினகரானர் தன்மகட்கு
இன்று கலியாணம் இப்போது அங்குசென்றால்
பண்டு அமைத்த பலனுனக்குக் கிட்டுமிப்போ
என்று கலைக்கோட்டு மாமுனியுந் தானேகி
சென்றான் தினகரரின் செல்வி மணந்தனிலே
அன்றைம் பத்தாறு அரசருக்கு மாளனுப்பி
தேசாதி தேசர் திசைவென்ற மன்னரெல்லாம்
மேசாதி யானோரும் மேவுந்தெய் வேந்திரனும்
இராவண சூரன் இராமர்முத லானவரும்
இராமர்குல ராசாதி நல்லமன்னர் வந்தனராம்
வில்லை வளைத்து வில்லில் நாண்பூட்டாமல்
முல்லைமன்ன ரெல்லாம் முகம்வாடிப் போயிருந்தார்
இராம ரெடுத்து இராம சரமேற்றி
சிராமர் மணஞ்செய்தார் சீதைத் திருமாதை
மணம் முகித்துவானோர் மங்களகீ தத்தோடே
துணைவர் தலைவரொடு சென்றா ரயோத்தியிலே
அயோத்தியா புரியில் ஆனதம்பி மாரோடும்
கையேற்று வந்த கன்னி திருவோடும்

ஸ்ரீராமர் வனவாசம்

வாழ்ந்திருக்கும் நாளில் மாதா கைகேசியம்மை
தாழ்ந்தமொழி சொன்னதினால் தம்பி பரதனையும்
நாடாள வைத்து நல்லஸ்ரீ ராமருந்தான்
கூடவொரு தம்பியோடும் குழல்சீதை மாதோடும்
நாடி நடந்தார் நல்லவன வாசமதில்
வாடிவந்து கானகத்தில் வாழ்ந்திருக்கும் நாளையிலே
லட்சுமண ருமங்கே ஏற்றகனி தான்பறிக்கக்
கட்சியுடன் நடந்து காட்டில் மிகப்போகச்
சூர்ப்பநகை தன்மகனும் துய்ய தவசுநிற்க
ஆர்ப்பரவா யீசர் ஆகாசத் தேவழியே

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments