Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 2941 - 2970 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 2941 – 2970 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 2941 – 2970 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

வருத்திக் கொடுக்கவென்று மாயவரு மீசுரரும்
பொருத்தமுள்ள வானோரைப் போய்வேண்டி வாருமென்றார்
அப்படியே வானோர் ஆகாய மீதேகி
செப்பமுட னமிர்தம் சென்றவர்கள் பார்க்கையிலே
ஆருரூப மில்லா ஆகாச மேல்வழியே
சீருரூப மான சிவகயிலை யானதிலே
பாயு மளவில் பலசாஸ்தி ரங்கள்கற்ற
வீயுமறை வேதியனும் விழிநுதலாள் கன்னியரும்
அமுதமதை யெல்லாம் அள்ளித் தலைமேலும்
குமுதமுடன் குடித்துக் கொழுத்துமிகப் பாளைவைத்துத்
தேகமது நிமிர்ந்து தேவியு மன்னவனும்
ஆகமது கூர்ந்து அலங்கரித்து நிற்பளவில்
வானோர்கள் பார்த்து வாய்த்தமிர்தங் காணாமல்
ஏனோயிது மாயமென்று எண்ணிமிகப் பார்ப்பளவில்
ஏகமாயிங்கு வந்து யாமிதைக் குடித்தோ மென்றான்
ஏகசிவ சங்கமெல்லாம் இங்கு இருக்கிறார்கள்
சிவனிடத்தில் வந்து செய்திசொல் என்றிழுத்தார்
அவசியமுண்டானால் அவரிங்கு வருவாரென்றார்
கொண்டாடி நின்ற கூர்மறையவன் தனையும்
பெண்டாட்டி யான பெண்ணதையும் வானோர்கள்
பிடித்து இழுத்துப் பின்னுமுன்னுந் தள்ளிமிக
அடித்துச் சிவன்முன்னே அச்சுதரும் பார்த்திருக்க
கொண்டுவந்து விட்டுக் கூறுவார் வானோர்கள்
பண்டுமுத லின்றுவரை பாய்ந்த அமிர்தமெல்லாம்
உண்டுகொண்டு தேகம் உரத்துமிகப் பாளைவைத்து
வண்டுறுக்கி மிக்க வலுப்பேசி னானெனவே
சொல்லிடவே வானோர் திருமா லதுகேட்டு
நல்லதுதா னென்று நாடிச்சிவ னோடுரைக்க
அப்போது நல்ல ஆதி சிவமுரைப்பார்
எப்போதும் பாலர் இவருண் ணமிர்தமெல்லாம்

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments