Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 3331 - 3360 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 3331 – 3360 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 3331 – 3360 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

அல்லோரும் வந்து ஆதியோ டேவுரைத்தார்
உடனே சிவமும் உள்ள மிகக்களித்து
இடமே தான்பேர்ந்து எழுந்தருளி ஈசுரரும்
அதிசயத்தைப் பார்ப்போமென்று அவரேகும் வேளையிலே
எதிராக நின்றுநந்தி ஏதுரைப்பா ரம்மானை
மூவர்களுந் தேவர்களும் மூர்த்திகளுங் காணாத
தேவரீ ரெழுந்தருளி திசைநோக்கி வந்ததென்ன
அப்போது நந்தியுடன் ஆதி மிகவுரைப்பார்
இப்போ தோரற்புதமாய் இருக்குதென்றா ரெல்லோரும்
வானோக்கிக் காலும் மலர்நோக்கிச் சிரசும்
தானமது மாறி தலைகீழாய் நிற்பதுவும்
பார்த்துவர லாமெனவே பையநடை கொண்டேனென்றார்
சாற்றுமொழி கேட்டுநந்தி தானுரைப்பா ரம்மானை
அங்கல்லத் தானம் அழிந்ததுகா ணீசுரரே
இங்கு நான்கண்டேன் எழுந்தருளி வந்ததினால்
தலந்தா னிளகி தான்வந்த தாலேதான்
குலந்தா னழியும் குசல்பிறக்கும் ராச்சியத்தில்
வரம்பழியு மாரி மனுநீதங் குன்றுமையா
பரம்பெரிய வேதம் பழுதுவருங் கண்டீரே
என்றந்த மாமுனியும் ஈசுரரை யுங்கூட்டி
குன்றுபொன் னான கிரிமேவித் தானிருந்தார்
நடந்த புதுமையென்ன நாம்வருத்திப் பார்க்கவென்று
திடந்தெளிந்த மாமுனிவன் செப்பவே ஈசுரரும்
சாத்திர வேதச் சதுர்மறையைத் தான்வருத்தி
சித்திர புத்திரரைச் சீக்கிரத்தி லேயழைத்து
வந்த புதுமை வகையென்ன நம்கணக்கா
இந்தக் கணக்கை எடுத்துரைநீ யென்றனராம்
அப்போது ஈசுரரை அன்போ டுறவணங்கி
செப்போடு வொத்த சித்திரருஞ் செப்பலுற்றார்
சாத்திரத்தி லுற்ற தன்மை மிகக்கேளும்

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments