Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 3631 - 3660 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 3631 – 3660 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 3631 – 3660 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சூத்திரச் சித்தனொன்று சுறுக்காயுண் டாக்குமென்றாள்

அகத்தீசர் பிறப்பு

உடனேதான் ஈசர் உள்ளங்களி கூர்ந்து
திடமாய்த்தான் ஈசர் சிந்தைதனி லுத்தரித்து
அகத்தீச னென்று ஆதிமன துள்ளிருந்து
செகத்தோர்கள் காண சித்தாதி தானாகி
சாத்திரமும் வித்தை சமூலக் கருவுடனே
சூத்திரச் சித்தாதி தோன்றினன்கா ணம்மானை
எல்லோருங் கண்டு இவராகு மென்றுசொல்லி
அல்லோரு மெச்சி அகமகிழ்ந்து கொண்டாடி
நல்லதென்று ஈசர் நன்முனியைத் தானோக்கி
வல்ல கவியோடு வந்துதித்த சாஸ்திரியே
என்னென்ன சாஸ்திரங்கள் ஏதேதுக் கானாலும்
இன்னாநிற்கும் நீசனுக்கு ஈந்து கொடுவுமென்றார்
அப்போ தகத்தீசர் ஆதிமறை முதலாய்
மைப்போடும் வித்தை மாஞால அச்சரமும்
கொடுத்தோ மெனவே கூறினார் மாமுனியும்
கடுத்தமுள்ள நீசன் கையதிலே தான்வேண்டி
நிற்கவே பின்னும் நிகழ்த்துவார் மாமுனியும்
அக்கறுகு சூடும் ஆதிமுத லந்தம்வரை
வசமாகும் வித்தை மரணம்வரா வித்தைகளும்
நிசமாகும் வித்தையெல்லாம் நீசனுக் கேகொடுத்தோம்
கொல்லவே மெத்தக் கோபத்தால் நீசனையும்
வெல்லவகை யில்லையல்லோ விடையேறு மீசுரரே
இந்நீசன் லோகமதில் இருந்தாளும் நாளையிலே
அன்னீத மல்லால் அறமறிய மாட்டானே
செய்வதெல்லாம் பாவச் சிந்தனையேயல்லாது
மெய்வரம்பு சற்றும் மிகவறிய மாட்டானே
அல்லாமற் பின்னும் அச்சுதனார் சக்கரமும்
பொல்லாதான் கொண்டு போறான்மால் கிரீடமும்
இவ்வரிசை ரண்டும் இவனிடத்தி லேயிருந்தால்

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments