Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 3871 - 3900 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 3871 – 3900 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 3871 – 3900 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

நீசன் தனையறுத்து நீதயுகந் தானாள
வாசமுட னேவரவே வரம்வேண்ட நில்லுமென்று
ஐந்தலை நாகமதை அந்தமுனி தானழைத்து
உன்றனக்குச் செய்தி உரைக்கிறேன் கேளெனவே
அலைமுகத்தில் நூற்றொன்று ஆழம் வரைக்கீழே
நிலைதனிலே நின்று நெடியோனை உள்ளிருத்தி
கலியை யழித்துக் கடியதர்ம மாகவேதான்
வலியயுக மாளுதற்கு வைகுண்டா வாவெனவே
நிற்பாய்த் தவசு நீபோவென அனுப்பி
நற்பாக நீங்கள் நற்றவசு செய்யுமென்று
சற்பமதுக் கரசு சங்குவெள்ளைச் சாரைதன்னை
பற்பக் கிரிதனிலே பைம்பொன்னிறப் பொய்கையிலே
வம்பை யழித்து வாய்த்ததர்ம ராச்சியத்தில்
அன்பரோ டேயரசு ஆளத்திரு மால்வரவே
வேணுமென்று நிட்டை விரும்பிச்செய் யென்றேதான்
ஆணுவ நாதன் அதற்கு விடைகொடுத்தார்
அன்னப்பட்சி யான அதிகப் பறவைகளும்
பொன்னம்பல கிரியில் போய்த்தவசு பண்ணுமென்றார்
சாத்திர மாமறையைத் தானெடுத்து மாமுனியும்
சூத்திர நெஞ்சத்து உள்ளிருத்தி வைத்தனராம்

கலைமுனி ஞானமுனி தவசு

இருத்திஸ்ரீ ரங்கம் ஏகவென் றெம்பெருமாள்
கருத்தி லுறயிருத்திக் கட்டாய் வருகையிலே
ஞான முனியினொடு நல்ல கலைமுனிவன்
தானமுள்ள மாமுனிவர் தலைகவிழ்ந் தேதவசு
சடைத்து முகம்வாடித் தானிருக்கு மப்போது
திடத்தமுடன் நல்ல திருமா லருகேகி
நன்றியுள்ள மாமுனியே நல்லகயி லாசமதில்
கண்டதுண் டுங்களையும் காட்டில்வந்த வாறேது
அப்போது மாமுனிவர் ஆதி பதம்பணிந்து
செப்போடு வொத்தத் திருமாலே நாங்களுந்தான்

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments