Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 4231 - 4260 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 4231 – 4260 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 4231 – 4260 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

வருத்தியே பேய்களுக்கு வரங்கொடுத் தவன்கையிலே
இருத்தி யணைவைத்து ஏழ்ப்பியும் பேய்களைத்தான்
பேய்களுட பேரில் பிழைத்ததுதான் குற்றமென்றால்
தேயக்கலி மாளுகையில் சிவவடகை லாசமதில்
முனிசிறையும் பேய்களுக்கு உயிரழிவு மென்றுசொல்லித்
துனிவான முனியுடனே சொல்லி யனுப்புமென்றார்
அப்போது ஈசுரரும் அந்தமுனியை வருத்தி
இப்படியே சொல்லி ஏழ்ப்பித் தனுப்பிடவே
மாமுனியுஞ் சம்மதித்து வரம்வேண்டிப் பேய்களுந்தான்
தாமுனிந்து பூலோகம் தன்னிலே வந்திடுமாம்
பேய்ப்பூ லோகமதில் போயிடவே ஈசுரரும்
ஆயனா ரோடே அருளுவா ரன்போரே
கயிலை யிருளைக் கடத்திவைக் காதிருந்தால்
அகில மதிலிருப்பு அல்லவே அச்சுதரே
அப்போது மாயவனார் ஆதி தனைநோக்கி
இப்போது நீங்கள் எல்லோரு மிக்கவேதாம்
நன்றான ஆண்டிகள்போல் நற்றா வடங்களிட்டுப்
பண்டார வேசமதாய்ப் பதிந்திருங்கோ வென்றுசொல்லி
நடந்தார் சீரங்க நகரிதனி லெம்பெருமாள்
மாயனுரை மாறாமல் வாய்த்தமே லோகமுள்ளோர்
ஈசர்முத லாண்டியென இருந்தார்கா ணம்மானை
ஆனதால் கலியன் அங்கே யனுவிலகி
மான மனுப்போலே வாழ்ந்திருந்தா ரம்மானை
பூலோக மெல்லாம் பொய்யான மாகலியன்
மாலோ சனையிழந்து மாறியே மானிடவர்
சாதி யினம்பிரித்துத் தடுமாறி மானிடவர்
ஊதி னங்களாக ஒன்றுக்கொன் றேயெளிதாய்
பிரட்டுருட்டாய் மானிடரைப் பிலமுள்ளோர் தானடித்து
மருட்டும் புரட்டுடனே மாநீச னாளுகையில்
மாரி யதுபொழிந்து வைகை யதுவுடைத்து

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments