Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 5791 - 5820 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 5791 – 5820 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 5791 – 5820 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

இப்படியே ஈசர் எடுத்துரைக்கத் தேவரெல்லாம்
எப்படிநாம் சொல்வோம் என்றே திகைக்கலுற்றார்
எல்லா மறிந்து எடுத்துரைப்பா ரெம்பெருமாள்
பொல்லாதார்க் கெல்லாம் பிறப்பொன் றிசைந்திருக்கு
சொல்லுகிறேன் நானுமொன்று சொல்லுவதைக் கேட்பீரோ
நல்லதுதா னென்று நாட்டமுற் றெல்லோரும்
அப்போது எம்பெருமாள் ஆதிசிவ மோடுரைப்பார்
இப்போது கேட்பீரோ யான்சொல்லும் நியாயமது

சிவன் திருமால் ஐக்கியம்

என்றுதிரு மாலுரைக்க எடுத்துரைப்பா ரீசுரரும்
மன்று தனையளந்த மாலேயென் மைத்துனரே
வாரு மெனஅழைத்து மாலோன் தனையிருத்திச்
சீருடனே வேதாவும் சிவனும் உமையாளும்
எல்லோருங் கூடி இருந்தந்த மாயவரின்
நல்லா யருகிருத்தி நவிலுவார் சத்தியமாய்
இதற்குமுன் செய்த இழிவெல்லாம் நீர்பொறுத்துக்
கதுக்காக வும்முடைய கருத்தின் படியாலே
நடக்கும்படிச் சட்டமெல்லாம் நாரணர்க்குத் தந்தோங்காண்
அடக்குடக் கெல்லாம் ஆதிக்குத் தந்தோங்காண்
இன்றுமுத லும்முடைய இச்சைபோ லேநடத்தி
என்றும் நடத்திக்கொள்ளும் என்றே விடைகொடுத்து
சட்டமெல் லாமுமக்குத் தந்தோ மினிநீர்தான்
இட்டசட்ட மீறி இனியொருவர் செய்யோங்காண்
உம்மை நினையாமல் உக்கலியைச் செய்ததினால்
நம்மை வரைநீர்தான் நடத்தும் படிநடத்தும்
என்றந்த ஈசுரரும் ஏற்ற உமையாளும்
அன்றந்த வேதாவும் அமரர்முனி தேவர்களும்
சத்திய மாகத் தானுரைத்தார் நாரணர்க்கு
மத்திய நாதன் மனமகிழ்ந் தேதுசொல்வார்
நல்லதுதா னென்று நாட்டமுற் றெம்பெருமாள்
வல்ல பரமே சுரரோ டேவகிர்வார்

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments