Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 5851 - 5880 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 5851 – 5880 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 5851 – 5880 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

இனியிருந்தா லென்னபலன் என்றுமிக எண்ணமுற்றுக்
கனிந்து வுமைத்தேடிக் காணவந்தோ மென்றுரைத்தார்
அப்போது வுங்களுக்கு ஆகவேண் டியவளம்
இப்போதே சொல்லும் என்றேகேட்டேன் தேவருடன்
சொல்லுகிறா ரந்தத் தேவர்கள்தா மீசுரரே
நல்லதுதா னிந்த நாட்டில்கலி வந்ததினால்
கலிக்குமுன் னுள்ளதுவும் கலியில்மிகக் கண்டதுவும்
அலிக்கிய மானதினால் அக்கலிமா ளும்போது
சிவசத்தி தான்முதலாய்ச் சீவனுள்ள செந்துகளும்
தவமுனிவ ராகிடினும் தரணி புற்பூண்டுவரை
மட்டை மருந்திலையும் மலைகடலும் வாசுகியும்
திட்டமுடன் நாரணர்க்குச் சிந்தையொத்த பேர்களெல்லாம்
மேனி யழுக்கறுத்து மேன்மூ டிருளறுத்து
யோனிப் பிறப்பும் உற்றலிங் கப்பிறப்பும்
அவரவர்க் குள்ள அதிகப் பிறப்போடும்
எவரெவர்க்கும் பூமியொன்றில் இனிப்பிறக்க வேணுமல்லோ
ஆகும் பிறப்பும் ஆகுவது மிந்நாளில்
சாகும் பிறப்புத் தவறுவது மிந்நாளில்
அப்படியே நீசன் அவன்பிறந்தத் தோசமதால்
எப்படியும் ரண்டிலொன்று ஆகுவது திட்டமுண்டே
ஆனதா லெங்களுட அக்கமதி லிப்போது
மானமாய்ச் சான்றோராய் வகிருமென்றா ரீசுரரே
கொஞ்சம் பொறுவுமென்று கூறிவந் தேன்முன்னமே
இஞ்சொல் பார்க்கும்போது இவ்வுலகி லுள்ளோரைப்
என்சொல் மொழியும் ஏற்றமுனி சாபமதும்
செம்மைசேர் கைலை சுவரில் எழுதினதும்
இம்மையில்லாப் பொய்யை இவர்கள் முதல் சொன்னதினால்
பிறவிசெய்ய ஞாயமுண்டு பிள்ளைமொழி சொன்னதினால்
திறவி முதற்பொருளே செய்தியென்ன சொல்லுமென்றார்
அப்போது ஈசுரரும் அச்சுதரைத் தான்பார்த்து

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments