Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 6661 - 6690 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 6661 – 6690 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 6661 – 6690 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

கோணவட்டத் துள்ளே குடியிருக்குங் கோவே
ஈசரே யெங்களுட இளைப்பெல்லாம் நீர்மாற்றித்
தேசமதில் வாழச் செல்ல வரந்தாரும்
பெற்றமக்க ளேழும் பிள்ளை யதுவழியும்
கொத்துக் கொடியும் குலவம்மி சமுழுதும்
சான்றோர் வழிமுழுதும் தற்காத்து எங்களையும்
பண்டூசல் செய்த பாரமுனி வன்பதத்தில்
சேர்ந்திருக்க வுமவரின் திருப்பாத முந்தொழுது
தாழ்ந்திருக்க வுஞ்சிவனே தாரும்வர மென்றுரைத்தார்
அப்போது நல்ல ஆதிசிவ மேதுரைக்கும்
இப்போது நாரணரே இக்கன்னி கேட்டதற்கு
இன்னவித மென்று இசைந்து வரங்கொடுவும்
சொன்னவிதங் கேட்டுச் சொல்லுவார் நாரணரும்
கேட்ட வரமதுதான் கெட்டிதான் ஈசுரரே
நாட்டமிந்தப் பெண்களுக்கு நான்சொல்ல நீர்துணையாய்
மடமாதே பெண்ணரசே மடந்தைக் கிளிமொழியே
தடமான பொய்கையிலே தண்ணீர் தனைச்சுருட்டி
ஈசருட முடியில் இட்டுக் கரங்குவித்து
வாசமுடன் நாடோறும் வருகின்ற வேளையிலே
இன்றேநீர் கொண்டு ஏகின்ற நீரையெல்லாம்
இன்றென் தலையில் இயல்பாய் விடுவுமென்றேன்
இரந்து திரியும் ஈசருக் கல்லாது
பரந்தபுவி மாயனுக்குப் படாதே எனவுரைத்தீர்
அப்போது உங்களைநான் ஆகட் டெனவுறுக்கி
இப்போது பாரென்று இத்தனையுஞ் செய்தனல்லோ
வண்ணத் திருமாலிவ் வகையுரைக்க மாதரெல்லாம்
கண்ணையவர் பொத்திக் கவிழ்ந்துமிக நாணிநின்றார்
அப்போது எம்பெருமாள் அவர்களுட னேதுரைப்பார்
ஒப்போடு வொத்த ஓவியங்க ளேகேளும்
மான்பெற்ற பிள்ளைகள்தாம் மானிலத்தி லேபெருகி

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments