Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 961 - 990 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 961 – 990 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 961 – 990 of 16200 அடிகள்

akilathirattu-ammanai

சூர பற்பனாகத் தோன்றினா யந்நாளில்
ஊரிரப்ப னாக உருவாக நான்தோன்றிக்
கொன்னே னானென்று கூறினே னப்போது
அந்நேரம் நீதான் ஆண்டியல்லக் கொன்னதென்றாய்
வேலா யுதத்தாலே வென்றாய்நீ யல்லாது
ஏலாது உன்னாலே என்றன்று பேசினையே
ஆயுதங்க ளம்பு அஸ்திரம்வா ளில்லாமல்
வாயிதமா யென்னகத்தால் வகிர்ந்தேனா னுன்வயிற்றை
என்றுமா யனுரைக்க ஏதுரைப் பான்சூரன்
பத்து மலையைப் பாரநக மாய்ப்பதித்து
இத்தலத்தி லென்னை இறக்கவைத்தா யல்லாது
ஏலாது உன்னாலே இந்தமொழி பேசாதே
மாலா னவேதன் மனதுகோ பம்வெகுண்டு
உன்னை யின்னமிந்த உலகில் பிறவிசெய்து
கொன்னா லேவிடுவேன் கிரேதா யுகம்வயது
திகைந்தல்லோ போச்சு திரேதா யுகம்பிறந்தால்
பகையுந் தானப்போ பார்மீதி லுண்டாகும்
முப்பிறவித் துண்டம் உயிர்ப்பிறவி செய்கையிலே
இப்பிறவி தன்னில் இசைந்தமொழி கேட்பேனான்
என்று இரணியனை இரணசங் காரமிட்டு
அன்று கிரேதா யுகமழித்தா ரம்மானை
அந்தக் கிரேதா யுகமழித்த அந்நாளில்
கந்தத் திருவேசம் கலந்திருந்த மாயவனார்
செந்தூர்ப் பதியில் சேர்ந்திருந்தா ரம்மானை
அந்தூர்ப் பதியில் அலங்கரித்த நாட்கழித்து
ஆதி கயிலை அரனா ரிடத்தில்வந்து
வேதியரும் நன்றாய் விளம்புவா ரம்மானை
சூரபற்ப னென்ற சூரக்குலங் களைத்துணித்து
வீரம் பறைந்ததினால் மேலுமந்த அவ்வுகத்தில்
இரணியனாய்த் தோன்றி நின்றஇ ராச்சதனைக்

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments