Homeஅய்யா வழிஅருள் நூல் 1441 - 1470 of 2738 அடிகள்

அருள் நூல் 1441 – 1470 of 2738 அடிகள்

அருள் நூல் 1441 – 1470 of 2738 அடிகள்

arul-nool

குருபுத்தி யார்க்கும் உள்ளதைநான்
சொல்வேன் கேள்மகனே
அப்பூவைத்தானெடுத்து அணிந்திடுங்கோ கண்ணுமக்காள்
மூன்றுநாமம் ஒன்றுபாம்பு
அதுமூன்றும் ஆடுதப்பா
கொத்தினால் திரும்பாதப்பா
அதுகுடிகெடுத்தப் பாம்புவிசம்
தலைமன்னர் மீதிருந்து பலசாஸ்திரங்கள் சொல்லுதப்பா
சங்குக்குள்ளிருந்து வந்தேன் வையகத்தில்
கும்பக்கோணப்பாதையாக குறிகள்சொல்லி வந்தேனப்பா
விள்ளுர் தனிலிருந்து விரைத்துவந்தேன் வையகத்தில்
ஏகன்போக னப்பாநான்
இருப்பதை அறிவாரில்லை
கருவூர்தனிலிருந்து கனவருத்தப் பட்டுவந்தேன்
பாலன் சிறுகுழந்தை வந்தபாதையறிவீர்மக்காள்
உங்களுக்கு வேலைசெய்ய நான்
உலகில்வந்தேன் கண்ணுமக்காள்
இருமனதா லெண்ணாதே பின்
எனக்குஉத்தரம் சொல்வாயn
மருந்துவாழ் மாமுனிவன் மாயசாலக் காரனும்நான்
நாடெல்லாம் பாடியாச்சே
நாதனென்ன செய்வேனப்பா
வேலை செய்தால் வினையில்லையே
அந்த விசமதுதான் அனுகாதப்பா
மந்திரத்தால் தந்திரத்தால் மாரணத்தால் தீர்ந்திடுமோ
எல்லோர்க்கும் கோடிப்பாம்பு இருக்குதப்பா சத்துருவாய்
நல்லோரைத் தீண்டாது நாதனிங்கேசொல்லுகிறேன்
முச்சந்திக்குள்ளிருந்துபாம்பு உச்சம்பெற்று வருகதப்பா
ஆவென்று அழுதாலும் அருந்தவப்பட்டாலும்
கூவென்று அழுதாலும் கொத்திவிடும் அப்பாம்பு

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments