Homeஅய்யா வழிஅருள் நூல் 151 - 180 of 2738 அடிகள்

அருள் நூல் 151 – 180 of 2738 அடிகள்

அருள் நூல் 151 – 180 of 2738 அடிகள்

arul-nool

உள்வாங்கிப் போய்விடும்.
ஒரு சேர்வை விபூதி ஆறுசக்கரத்துக்கு விற்கவும்
ஒரு லிங்கம் மூன்று வராகனுக்கு விற்கவும்,
ஒருகளஞ்சிசல மெடுக்கவும்,
இரண்டு நாளிகை வழிக்கு ஒரு தர்மசாலைமடமும் முடியும்.
தர்மம் கொடுக்கிற பேர்கள் உண்டு,
தர்மம் வாங்கிற பேர்கள் இல்லையென்று
சொல்லப்பட்;ட வெயிலாள் மடக்கொயாள்
வயிற்றிலே ஒரு பிற்ளை பிறந்து பத்துவயசாச்சு.
நாங்களும் மகா அருணாசலத்திலே
வாலிபப் பிள்ளையாயிருக்கிறோம்
அந்த வாலிபப்பிள்ளை என்ன சொல்கிறாரென்றால்,
வீரபுரந் தர்மராசா வழியிலே வீரநாராணர் இங்குவந்து
மூன்றுமாசம் தவசிபண்ணி
இரண்டு மாதத்துக்கு மேல் வருகிறார்.
வந்தவுடன் அன்னியோன்னியக் கலகங்கள் உண்டாகும்
அந்த கலகத்திலே
ஒருவருக்கொருவர் அசுத்தியமாய்ப் போய்விடுவார்கள்
போனபேர்கள் போக இருக்கிறபேர்கள்
புண்ணிய புருஷராய் இருப்பார்கள்
அவர்களுக்கு வேண்டிய பாக்கியத்தைக் கொடுப்போம்.

விருத்தம்

பாக்கியமும் கொடுப்போம் நாமும் பலமுடன் வாழுவோர்க்கு
நோக்கிய கருணை யுண்டாம் நோவில்லா திருந்து வாழ்வார்
தாக்கிய வாச கத்தின் தன்மையை நம்பு வோர்க்கு
வாக்கிய வைகுண்ட வீடு வந்தவர் வாழ்வார் தாமே.

தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடம் நிசமே சொன்னோம்
கனிமொழிச் சோதி வாக்கு கையெழுத் தாதி னோக்கும்
துணிவுடன் கேட்டோர் உற்றோர் தொலைந்தனர் பிறவி தானே,

வாசித்தோர் கேட்டோர் உற்றோர் மனதினில் உணர்ந்து கற்றேர்

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments