Homeஅய்யா வழிஅருள் நூல் 1531 - 1560 of 2738 அடிகள்

அருள் நூல் 1531 – 1560 of 2738 அடிகள்

அருள் நூல் 1531 – 1560 of 2738 அடிகள்

arul-nool

கூத்தாடிச்சித்தனும்நான் கூன்கிழவன்பண்டாரம்
பண்டாரக்கிழவனடாநான் பதிவைத்து பிடித்திடுவேன்
இன்னுமென்னை அறியவில்லை சோபனமும் சொல்லவில்லை
மருந்துவாழ்மலையென்று மயங்குகிறாரென் மக்களெல்லாம்
மேலுங் கீழுந்தெரியாது
நான்மெய்யன்மகன் பொய்யனப்பா
கட்டுப்பாடுமொட்டாத நான் உன்குருவும் சொல்லுகிறேன்
கங்கையிலேதீர்த்தமாடி உங்கள்கேசவரை போற்றிடுங்கோ
காயக்காரன் மாயசித்தம் நானுங்கள்
கண்காணப் பெருவழியேன்
அவரவர்கள்செய்யுங்குற்றம் உங்களாண்டி அறிவேனடா
கடலதிலேதீர்த்தமாடி நீங்கள்கனத்தவம் செய்திடுங்கோ
உங்கள்கங்கையிலே எப்போதும்கேசவன் இருக்கின்றேன்
மயங்குகிறார் ஏழுபெண்ணும் இந்தவையகம் அறியவில்லை
நளாலுதிசைக்குள்ளாக நடுவேயென்று இருக்குதப்பா
அந்தமூலைப்பேருஞ்சொல்வான் அறிந்தோரறயிந்திடுங்கோ
தெட்சணாமூலையிலே பதிபோட்டிருக்குதடா
அதுகுட்டிபோட்டுஇருக்குதப்பா முக்கோடிதவஞ்செய்து
பார்தனிலே அக்குருவும் பதிபோட்டிருக்கின்றாரே
இரவுபகல்எப்போதும் அவர்க்குயிரைபோட்டாற்றுவதில்லை
அஞ்சாமல் பிடித்திடுங்கோ அடங்கிடுவாரக்குருவும்
நஞ்சுதின்று நாளாச்சு நான்மறையப்போறெடனா
வஞ்சகமில்லை சொன்னோம் வழிபார்த்துப்பிடித்திடுங்கோ
வையத்தில்யாபேர்க்கு மொருவலுச்சக்கரம்வருகுதப்பா
கந்தன்திருவேலனே என்ன ஆண்எயென்றறியமாட்டான்
கண்டதுண்ட மாகவல்லோ கனத்தபூமி வெடிக்குதடா
கோலநடுமாலயனும்சாலங்கட்டி ஆடுகிறேன்
காளிவெள்ளம் வருகிறதுகப்பல்செய்து வைத்திருங்கோ
நாடெல்லாம் காடாகும் நல்அக்கினிவந் தாகுதடா
நாலுகாலு ஜீவஜெந்து நாட்டிலில்லை ஓட்டமடா

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments