Homeஅய்யா வழிஅருள் நூல் 1981 - 2010 of 2738 அடிகள்

அருள் நூல் 1981 – 2010 of 2738 அடிகள்

அருள் நூல் 1981 – 2010 of 2738 அடிகள்

arul-nool

நாடுபதி னாலறிய நாமமதுவிட்டு
காணாத கற்பகப்பால் வையதிலே கொடுத்து
காளியென்ற தேவியுடைய கையில்மிக வீந்து
வளர்த்துத்தரு வாயெனவே வாக்குமிக வாங்கி
மாமுனியும் ஓர்மலையில் மானாகச் சென்றார்
இளைத்துத்தளர்ந்து கூட்டையதில் போடவென்று
எண்ணிவிட யெம்பொருமாள் எய்துவிட்டான்வேடன்
வேடனுக்குப் புத்திசொல்லி பஞ்சவரை வருத்தி
வீரத்தனமெல்லாம் தண்டாலே யவர்வாங்கி
சூரமுள்ள கூட்டையதில் தான்கிடத்திப் போட்டுச்
சூத்திர மாயவரும் ஸ்ரீரங்கம் மேவிச் சென்றார்
இப்படியே யுள்ளவரலாறான தெல்லாம்
ஆதிகருட ஆழ்வாரும் அம்மையுடன்சொல்லி
இப்போது கூட்டி வாறேனம்மா எனக்குவிடைதந்தால்
என்னடி பணிந்துசருட ஆழ்வாரும்நிற்க
நல்லதுதான் அண்ணருடைய அதிகத் திறங்கேட்டோம்
நாலுமணி நேர மாதிநாராயணரைக் கூட்டிக்கொண்டு
மாதுபார் வதிகயிலை வாழ்ந்திருந்தாளே
கயிலையில் மாதுதானும் கட்டுடனிருக்கும்போது
ஒயிலுடன் கருடனும்; ஒருதொடி தன்னில்சென்று
அகிலமும் அளந்தநாதன் அவரையும் கூட்டிவாறேன்
கயிலையில் வந்துஞாயம் கட்டுடன் உரைக்கின்றாரே
பரிதனக் குதவுமாயப் பாவைய ரேழுபேரும்
திறமையாய் தவசிபார்க்க சீர்தனைச் செய்யுமென்றார்
தவம்தன்னையேற்றாம் வாருங்கோ வெளியிலென்றார்
வெளியே வந்துமாது விளக்கமே தீர்த்தோமென்று
தெளிவுடன் வெற்றியோங்கி வாழ்வைநீதருவாய்போற்றி

விருத்தம்

சீதமாங்குணச்செல்வனே போற்றி சிவசிவாசிவனே போற்றி
நீதவாநனிநடப் பெய்துவாய் போற்றி நீ சிவசிவராகவா போற்றி
மாதவா அரிகேசவா போற்றி வல்லனே அரி செல்வனே போற்றி

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments