Homeஅய்யா வழிஅருள் நூல் 241 - 270 of 2738 அடிகள்

அருள் நூல் 241 – 270 of 2738 அடிகள்

அருள் நூல் 241 – 270 of 2738 அடிகள்

arul-nool

பின்னும் நாராயண வைகுண்டசாமி தானே
பேய் பலசீவசந்து ஊர்வன புல்பூண்டுகல்கா வேரியறிய,
எப்படியென்றால் வல்லாத்தான் வைகுண்டம் பிறந்து
காணிக்கை கைக்கூலி காவடி ஆடுகிடாய் கோழி பன்றி
யிரத்தவெறி தீபம் இலை பட்டையிதுமுதல்
யெந்தனக்கு வாங்க அவசியமில்லையென்று
தர்மம் நிச்சயித்து நாடும் குற்றம்கேட்க
நாராயணம் சிறையிருக்கும்போது,
இனி ஆரேக்கார் என்று அதை அறிந்து
ஓங்கியிருங்கோவென்று உபதேசித்தார்.
உடனே அவையெல்லாம்
‘அய்யாவாணை நாங்கள் ஒன்றும் யேற்கமாட்டோம்’
என்று சொல்லி போனார்கள்.
உடனே நாராயணவைகுண்டசாமி
தானே ஓராண்டு ஒன்றரை ஆண்டு கழித்து
யுகம் சோதித்துவருகிறபோது பேய்செய்கிற அநியாயத்தால்
வைகுண்டசுவாமியி
டம் வந்து ஆவலாதிவைத்தார்கள்
உடனே வைகுண்டராசரும் திட்டித்துப்பார்க்கிறபோது
பேய், செய்கிறது அநியாயம்தான் என அறிந்து
பேய்களுக்கு உள்ள ஆகமக்கணக்கை சோதித்து
பேயையெரிக்க வேண்டுமென்று மனதில் உத்தரித்தார்.

விருத்தம்

பேய்கள்தான் பிறந்தவாறும் பெருவரம் பெற்றவாறும்
மாய்கையாய் புவியில் பேய்கள் வந்ததோர் நாளும்பார்த்து
ஞாயமாய் நடுக்கள் கேட்டு நாமதை யெரிக்கவென்றே
ஆயர்முன் னெழுத்தும்கொண்டு அருள்முனிவருகவென்றார்

வரவென்று உரைத்தபோது மறைமுதல் வேதன்வானோர்
துராதனமீதோடே ஆவி துரிதமாய் வந்தாரங்கே
பரமருள் வைந்தராசர் பார்த்தவர் தன்னை நோக்கி
விரைவுடன்பேய்க்கு முன்னாள் விதிதனைப்பாருமென்றார்

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments