அருள் நூல் 2431 – 2460 of 2738 அடிகள்
எந்தஞாயமாய் நான்தவம் செய்குவேன்
சீமையெங்கும் அநியாயம் கண்டதால்
சொல்லுமுபாயம் இறைகூடி கண்டமும்
வன்மையாக நிறுத்தியே தா;மமாய்
மக்கள்தன்னையும் வைத்தாள வென்றுதான்
பேய்கள் செய்யும் கொடுமை அகற்றியே
பலிகள் தீபஒலிகளடக்கியே
ஞாயமாக நான் சீமையாளவும்
நாரணர்சுவாமி வைகுண்டமாகவும்
தேசமாகிய தெச்சணமீதினில்
செல்வச் சான்றோரிடமே பிறந்துநான்
வாசமானபுமை நடத்தவே
மாயனேமிதம் கொண்டிருக்கவே
திட்டமாயிந்ததுட்டவீராpன்
செய்திகேட்ட சிணப்பொழுதன்
வட்டமாகிய நெஞ்சம் குளிருதுமனம்
வாழ்கயிலைக் கதியதியாக
சூழஇந்தத் துடிவீரர் தங்களை
சூச்சமாகச் சுருக்காய் அழைத்துநீர்
முன்னிருந்த வரத்தின் முறைமையை
உபாயமாக அடக்கி மறுவரம்
பின்னும் தங்கப் பிறவியாக்கிப்
பேரும்மாற்றி புதுவர மீந்துநீர்
எந்தனோடு இதமா அனுப்பினால்
ஏற்றகாரியம் பார்த்து முடிப்பேன்நான்
சிந்தையது செய்யாதே பானாக்கால்
தெச்சனாபுரி சென்றேறப் போகாது
என்று மாயோனிதுவுரை கூறிட
இருந்தபேர்களும் உள்ளதென் றார்களே
விருத்தம்
ஆயனார் உரைத்தபோது அரனுமே மனதுமெச்சி
விளக்கவுரை :




