Homeஅய்யா வழிஅருள் நூல் 871 - 900 of 2738 அடிகள்

அருள் நூல் 871 – 900 of 2738 அடிகள்

அருள் நூல் 871 – 900 of 2738 அடிகள்

arul-nool

வழக்கண்டேன் சிவனே அய்யா
சட்டிக்காய்க்கு கொம்புமுளைத்து கோழியுடன்போர்
பொருதக்கண்டேனையா சிவனே அய்யா
நாடுதனிலே திரிந்து வாயல் காக்கும் நாயைநரிவந்து
கடிக்கக்கண்டேன் சிவனே அய்யா
சாவல்கோழியல்லாவ கூவுமென்றுசொல்வார்கள்பெட்டை
தானுமே கூவக்கண்டேன் சிவனே அய்யா
உண்டமயக்கத்திலே உறங்கப்போன உயிர்வோடிப்
போகக்கண்டேன் சிவனே அய்யா
மூட்டைக்கடித்தால் பாம்பு விசம்போல
மோசம் போகக்கண்டேன் சிவனே அய்யா
பெற்றதாய் பிள்ளையை முன்வைத்துப்படுக்கையில்
ஈனாபேச்சிவந்து தின்னக்கண்டேன் சிவனே அய்யா
கருங்கும்பலா யிந்த பயிர்களைத்தான் பெரிய
கடல் வந்தழிக்ககண்டேன் சிவனே அய்யா
பாகல்போடவே கரையாய் முளைத்துவர
பாகமும் கண்டேன் சிவனே அய்யா
பெருத்தஊரில் உள்ள குருத்தைக்கடிப்பதற்கு
பேய்வந்து சூழக்கண்டேன் சிவனே அய்யா
முனிபெற்ற பிள்ளையைச் சுண்டெலி தானும்கண்டு
முடுக்கிக் கடிக்கக்கண்டேன் சிவனே அய்யா
கிடைகலைந்து ஆடியில் கூடிய யெலிகளெல்லாம்
கிடைகலைந்து ஓடக்கண்டேன் சிவனே அய்யா
மாபாவி போடுகின்ற திருமுத்திரி அவர்க்கு
வாச்சியாய்த் தோன்றக்கண்டேன் சிவனே அய்யா
கொடிமுடியிடிந்து விழும்போது கொம்மட்டிக்காய்
குறுக்கவே தங்கக்கண்டேன் சிவனே அய்யா
கடுகைத்துளைத்து அந்ததுளைக்குள்ளே நின்றதண்ணி
கடல்போல தோன்றக்கண்டேன் சிவனே அய்யா
கலியுகம் தன்னிலேதேடியே போட்டநகை

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments