HomeUncategorizedஉரோம ரிஷி சித்தர் ஞானம் 6 - 10 of 13 பாடல்கள்

உரோம ரிஷி சித்தர் ஞானம் 6 – 10 of 13 பாடல்கள்


உரோம ரிஷி சித்தர் ஞானம் 6 – 10 of 13 பாடல்கள்
6. அழைப்பதுவும் நல்லபிள்ளை யானால் நன்றே!
          ஆகாத சீடர்களைச் சேர்த்தல் தோடம்;
பிழைப்பதற்கு வழிசொன்னால் பார்க்க மாட்டான்
          பெண்டாட்டி மனங் குளிரப் பேசு மாடு;
உழைப்பதற்குச் செனனமெடுத் தானே யல்லால்
          உதவிதனக் கெவ்வளவு முண்டோ வில்லை;
இளப்பமிவன் பேச்சையடிக் கடிதா னாகு
          மேதுக்குச் சொல்லுகிறோ மினிமேல் தானே.
விளக்கவுரை :
7. மேலென்ன இருக்கையிலும் நடக்கும் போதும்
          வேறுரையால் சாரங்கள் விடாம லேற்று
நாலென்ன எட்டென்ன வெல்லா மொன்று
          நலமான அட்டாங்க மப்பிய சித்துக்
காலென்னப் பிராணாய முன்னே செய்யில்
          கணக்காகப் பூரகங்கும் பகமே நாலு
கோலென்ன ரேசகந்தா னொன்று மூன்று
          குறையாமற் சரபீங் கூட்டித் தீரே.
விளக்கவுரை :
8. கூட்டியே பழகினபின் சரபீ சத்தில்
          குறையாமல் சாதித்தால் பிரம ரந்த்ரம்
காட்டுவிக்கு மல்லால்விழிக் குறியி னாலே
          கண்மூக்கு மத்தியிலே கண்டு பாரு;
மூட்டுவிக்கு மாதார மாறுந் தானே
          மூலவட்டக் கணபதிநான் முகத் தோன் மாயன்
தாட்டிகமா மணிப்பூரங் கையன் வட்டந்
          தணலான ருத்திரனுந் தணலு மாமே.
விளக்கவுரை :
9. கனலேறிக் கொண்டிருந்தா லெல்லா முண்டு;
          காற்றைவெளி விட்டக்கால் கருமந் தீதான்
புனலூறும் வழிப்பாதை யிந்த மார்க்கம்
          பொல்லாத துரோகிக்குப் பொய்யா மன்றே?
செலுத்துவது முண்ணாக்கி லண்ணாக் கையா!
          சென்றேறிப் பிடரிவழித் தியானந் தோன்றும்;
வலுத்ததடா நாலுமுனக் கமுத மாச்சு;
          மவுனமென்ற நிருவி கற்ப வாழ்க்கை யாச்சு;
விளக்கவுரை :
10. சொலித்திருக்கும் பன்னிரண்டி லிருத்தி யூது
          சோடசமாம் சந்த்ரகலை தேய்ந்து போச்சு;
பலித்ததடா யோகசித்தி ஞான சித்தி
          பருவமாய் நாடிவைத்துப் பழக்கம் பண்ணே.
மூடாமல் சிறுமனப் பாடம் பண்ணி
          முழுவதுமவன் வந்ததுபோல் பிரசங் கித்து
வீடேதிங் குடலேது யோக மேது
          வீண்பேச்சாச் சொல்லி யல்லோ மாண்டு போனார்?
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments