HomeUncategorizedஉரோம ரிஷி சித்தர் ஞானம் 11 - 13 of 13 பாடல்கள்

உரோம ரிஷி சித்தர் ஞானம் 11 – 13 of 13 பாடல்கள்


உரோம ரிஷி சித்தர் ஞானம் 11 – 13 of 13 பாடல்கள்
11. காடேறி மலையேறி நதிக ளாடிக்
          காய்கிழங்கு சருகுதின்று காமத் தீயால்
சூடேறி மாண்டவர்கள் கோடா கோடி
          சொருபமுத்தி பெற்றவர்கள் சுருக்க மாச்சே.
சொருபமுத்திக் கடையாளம் ஏதென் றக்கால்
          சுடர்போலக் காணுமடா தூல தேகம்;
அருபமுத்தி யிடமல்லோ பிரம ஞானம்
          அபராட்ச மென்றுசொல்லுங் சிரவ ணந்தான்
விளக்கவுரை :
12. பருபதத்தை அசைப்பனெனச் சிற்றெ றும்பின்
          பழங்கதைபோ லாச்சுதிந்த யோகம் விட்டால்
வெறுங்கடத்தி லீப்புகுந்த வாறுபோல
          வேதாந்த மறியாத மிலேச்சர் தாமே.
ஓமென்ற கெட்டபுத்தி மாணா கேளே;
          உலகத்தில் மானிடர்க்காம் ஆண்டு நூறே;
ஆமென்ற இருபத்தோ ராயி ரத்தோ
          டறுநூறு சுவாசமல்லோ ஒருநா ளைக்குப்         
விளக்கவுரை :
13. தணலாகும் விசுத்தியறு கோண வட்டஞ்
          சதாசிவனார் வட்டமல்லோ குருபீ டந்தான்;
மனையான பதினியிலே குறித்துப் பார்க்க
          மத்யமுதல் கரிகொண்டு தூங்குந் தூங்கும்        
போமென்று போனதனால் நாள்கு றைந்து
          போச்சுதுபோ காவிட்டால் போவ தில்லை;
தாமொன்று நினைக்கையிலே தெய்வ மொன்று
          தானினைந்த தன்மையல்லோ விதிகள் தாமே?
விளக்கவுரை :
உரோம ரிஷி சித்தர் ஞானம் முற்றும்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments