Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 271 - 300 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 271 – 300 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 271 – 300 of 16200 அடிகள்

akilathirattu-ammanai


சாகா திருக்கும் சமூலத் திருப்பொருளே
ஏகா பரனே எங்கும் நிறைந்தோனே
மூலப் பொருளே முதற்பொருளே காரணரே
சாலப் பொருளே தவத்தோ ரரும்பொருளே
நாரணரும் வேதா நாடிப் பொரும்போரில்
காரணரே நீரும் கனல்கம்ப மானோரே
ஆலமு தருந்தி அரவை மிகவுரித்துக்
கோலத் திருக்கழுத்தில் கோர்வையா யிட்டோனே
ஆனைதனை யுரித்து அங்கமெல் லாம்புனைந்து
மானேந்திய கரனே மழுவேந்திய சிவனே
கோனேந்திர கிரியில் குடியிருக் குங்கோவே
தானே யிருக்கும் தவமே தவப்பொருளே
ஆதியாய் நின்ற அதியத் திருமுதலே
சோதியே சோழன் சொல்நெறியைக் கேளுமையா
வாடிவந்த பச்சினுக்கு வாளா லவனுடம்பைத்
தேடிவந்த வேடனுக்குத் துடையரிந் தீந்தவன்காண்
ஆறி லொருகடமை அவன்வேண்டிட் டானெனவே
மாறி யவன்புவியோர் மனதிற்கௌ வைகளில்லை
கோவில் சிவாலயங்கள் குளங்கூபம் வாவிகளும்
சேவித் தனுதினமும் செய்வானே தானதர்மம்
ஆதலால் சோழன் அரசாளுஞ் சீமையிலே
நீதமாய்த் தெய்வம் நிலைநிறுத்த வேணுமையா
என்று மிகத்தேவர் இறைஞ்சித் தொழுதிடவே
கன்றிருந்த ஈசர் கரியமா லோடுரைப்பார்
நல்லதுகாண் மாயவனே நாட்டை மிகக்காக்க
வல்லவனே பூமா தேவி தனைவருத்தும்
வருணன் தனையழைநீ மாதமும் மாரிபெய்ய
கருணைக் குடைவிரிக்க கங்குல் தனையழையும்
வாசி யதுபூவாய் வழங்க வரவழையும்
தோசி மறலியையும் சொல்லி விலக்கிடுநீ

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments