அகிலத்திரட்டு அம்மானை 391 – 420 of 16200 அடிகள்
விசுவாச மேலோர் விமல னடிவணங்கி
வசுவாசு தேவன் வந்து மிகவணங்கி
மறைவேத சாஸ்திரங்கள் மலரோ னடிவணங்கி
இறவாத தேவர் இறைஞ்சி மிகவணங்கி
எமதர்ம ராசன் எப்போதும் வந்துநிற்க
பூமகளும் வேதப் புரோகிவந்து தெண்டனிட
காமதேவன் முதலாய்க் கணக்கர் மிகுமுனிவர்
நாமநெடி யோன்பதத்தை நாள்தோறும் போற்றிநிற்க
தலைவ னிருக்கும் தங்கத் திருக்கயிலை
நிலைமை யெடுத்துரைக்க நிலையாது அம்மானை
ஆறு செஞ்சடை சூடிய அய்யனார்
அமர்ந்து வாழுங் கயிலை வளமதைக்
கூறக் கூறக் குறைவில்லை காணுமே
கொன்றை சூடும் அண்டர் திருப்பதம்
வாறு வாறு வகுக்க முடிந்திடா
மகிழுங் குண்ட வளஞ்சொல்லி யப்புறம்
வேறு வேறு விளம்பவே கேளுங்கோ
மெய்யுள் ளோராகிய வேத அன்பரே
அகில வளமை
கயிலை வளமை கட்டுரைக்கக் கூடாது
அகில வளமை அருளக்கே ளம்மானை
தேவாதி தேவர் திருக்கூட்ட மாயிருக்க
மூவாதி மூவர் மிக்கவொரு மிக்கவொரு
சிங்கா சனத்தில் சிறந்திருக்கும் வேளையிலே
மங்காத தேவி மாதுதிரு லட்சுமியாள்
ஈரே ழுலகும் இரட்சித்த வுத்தமியாள்
பாரேழும் படைத்த பரமதிரு லட்சுமியாள்
நன்றா யெழுந்திருந்து நாரா யணர்பதத்தைத்
தெண்டனிட்டு லட்சுமியும் செப்புவா ளம்மானை
தேவரீ ரென்னைத் திருக்கலியா ணமுகித்துக்
கோவரி குண்டக் குடியிருப்பி லேயிருத்திப்
விளக்கவுரை :




