HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5311 - 5315 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5311 – 5315 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5311 – 5315 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5311. கேளப்பா விக்கல்
யெருவுக்குள்ளே கெவனமுடன் பரித்தகட்டைமேலேவைத்து
நாளப்பா போகாமல் தீயைமூட்டி
நலம்பெறவே தகடதனை உள்ளமர்த்தி
சூளப்பா புடம்போட வர்ணமாகி
சுந்தரனே வரணமது சொல்லொண்ணாது
ஆளப்பா யிப்படியே வறுபுடமுந்
தீர்த்தால் வப்பனே தங்கமென்ற வரணமாச்சே
விளக்கவுரை :
5312. ஆச்சப்பா வரணமென்ற
யேமந்தன்னை வப்பனே மூசையிட்டு வுருக்கிப்பாரு
மூச்சடங்கி வரணமது யேறியல்லோ
முனையான யேமமது பசும்பொன்னாச்சு
மாச்சலென்ற பிறவியது
தங்கமாச்சு மகத்தாக சுயத்தங்கம் இதற்கீடாமோ
யேச்சென்றுங் கூறார்கள்
பிறவித்தங்கம் யெழிலான சாயமென்ற தங்கந்தானே
விளக்கவுரை :

[ads-post]
5313. தானான தங்கமது பிரகாசந்தான்
சதகோடி சூரியருக் கொப்பேயாகும்
கோனான சித்துமுனி
ரிஷிகள்தேவர் குவலயத்தில் எந்தனைப்போல் கூறவில்லை
தேனான மனோன்மணியாள்
பூசைக்காக செப்பியதோர் வித்தையது வர்ணம்பொன்னாம்
மானான பொன்னிதுதான்
எவர்தான்காண்பர் மகத்தான சிவயோகிக் காண்பார்பாரே
விளக்கவுரை :
5314. பாரேதான் யின்னமொரு
மார்க்கங்கேளு பாலகனே புலிப்பாணி மைந்தாபாரு
நேரேதான் செந்தூரந்
தனையெடுத்து நேர்மையுடன் முன்சொன்ன நீராலாட்டி
சீரேதான் குடவனையே தகடுதட்டி
சிறப்பாக மருந்தததனை மேலேபூசி
நீரேதான் சொன்னபடி
மார்க்கமப்பா நிருதியுடன் புடம்போட பொன்மாற்றாமே
விளக்கவுரை :
5315. மாற்றான பொன்னதுவும்
என்னசொல்வேன் மகத்தான தங்கமது பிறவிக்கொப்பாம்
நாற்றமுள்ள குடவனது
கட்டிப்போச்சு நலமான நாதாக்கள் கண்டதில்லை
கூற்றமெனுஞ் செம்பதுவும்
வூறலேகி குணமான நாகமது சீறல்நின்று
ஏற்றமது வாராமல்
பொன்னேயாகில் யெழிலான மாற்றதுவுங் காட்டுந்தானே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments