குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : இறைமாட்சி.
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.
Translation:
Where
king is easy of access, where no harsh word repels,
king is easy of access, where no harsh word repels,
That
land’s high praises every subject swells.
land’s high praises every subject swells.
Explanation:
The
whole world will exalt the country of the king who is easy of access, and who
is free from harsh language.
whole world will exalt the country of the king who is easy of access, and who
is free from harsh language.
கலைஞர் உரை:
காட்சிக்கு எளிமையும், கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும்.
[ads-post]
மு.வ உரை:
காண்பதற்கு எளியவனாய்க் கடுஞ்சொல் கூறாதவாய் இருந்தால் அந்த மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை உலகம் புகழும்.
சாலமன் பாப்பையா உரை:
நீதி வேண்டி வருபவர் காண்பதற்கு எளியனாய், எவர் இடத்தும் கடுஞ்சொல் கூறாதவனாய் இருந்தால், ஆளுவோனின் ஆட்சிப் பரப்பு விரிவடையும். (அவர் கட்சி வெற்றி பெறும்தொகுதிகள் கூடும்).
மணக்குடவர் உரை:
காண்கைக்கு எளியனாய்க்
கடுஞ்சொற்கூறுதலும் அல்லனாயின் அம்மன்னனை உலகத்தார் உயர்த்துக் கூறுவர். இது
மன்னன் உலகத்தார்மாட்டு ஒழுகுந் திறங் கூறிற்று.
கடுஞ்சொற்கூறுதலும் அல்லனாயின் அம்மன்னனை உலகத்தார் உயர்த்துக் கூறுவர். இது
மன்னன் உலகத்தார்மாட்டு ஒழுகுந் திறங் கூறிற்று.
பரிமேலழகர் உரை:
காட்சிக்கு எளியன் – முறை
வேண்டினார்க்கும் குறை வேண்டினார்க்கும் காண்டற்கு எளியனாய், கடுஞ்சொல்லன்
அல்லனேல் – யாவர் மாட்டும் கடுஞ்சொல்லன் அல்லனும் ஆயின். மன்னன் நிலம் மீக்கூறும்
– அம் மன்னனது நிலத்தை எல்லா நிலங்களிலும் உயர்த்துக் கூறும் உலகம் . (முறை
வேண்டினார், வலியரான்
நலிவு எய்தினார். குறை வேண்டினார், வறுமையுற்று இரந்தார். காண்டற்கு எளிமையாவது, பேர்
அத்தாணிக்கண் அந்தணர் சான்றோர் உள்ளிட்டாரோடு செவ்வி உடையனாயிருத்தல். கடுஞ்சொல்:
கேள்வியினும் வினையினும் கடியவாய சொல். நிலத்தை மீக்கூறும் எனவே, மன்னனை
மீக்கூறுதல் சொல்ல வேண்டாதாயிற்று. மீக்கூறுதல் ‘இவன் காக்கின்ற நாடு பசி, பிணி, பகை முதலிய இன்றி
யாவர்க்கும் பேரின்பம் தருதலின் தேவருலகினும் நன்று‘ என்றல். ‘உலகம்‘ என்னும் எழுவாய் வருவிக்கப்பட்டது.)
வேண்டினார்க்கும் குறை வேண்டினார்க்கும் காண்டற்கு எளியனாய், கடுஞ்சொல்லன்
அல்லனேல் – யாவர் மாட்டும் கடுஞ்சொல்லன் அல்லனும் ஆயின். மன்னன் நிலம் மீக்கூறும்
– அம் மன்னனது நிலத்தை எல்லா நிலங்களிலும் உயர்த்துக் கூறும் உலகம் . (முறை
வேண்டினார், வலியரான்
நலிவு எய்தினார். குறை வேண்டினார், வறுமையுற்று இரந்தார். காண்டற்கு எளிமையாவது, பேர்
அத்தாணிக்கண் அந்தணர் சான்றோர் உள்ளிட்டாரோடு செவ்வி உடையனாயிருத்தல். கடுஞ்சொல்:
கேள்வியினும் வினையினும் கடியவாய சொல். நிலத்தை மீக்கூறும் எனவே, மன்னனை
மீக்கூறுதல் சொல்ல வேண்டாதாயிற்று. மீக்கூறுதல் ‘இவன் காக்கின்ற நாடு பசி, பிணி, பகை முதலிய இன்றி
யாவர்க்கும் பேரின்பம் தருதலின் தேவருலகினும் நன்று‘ என்றல். ‘உலகம்‘ என்னும் எழுவாய் வருவிக்கப்பட்டது.)




