HomeUncategorizedThirukural 398 of 1330 - திருக்குறள் 398 of 1330

Thirukural 398 of 1330 – திருக்குறள் 398 of 1330

Thirukural
398 of 1330 –
திருக்குறள் 398 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : கல்வி.
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.
Translation:
The
man who store of learning gains,
In
one, through seven worlds, bliss attains.
Explanation:
The
learning, which a man has acquired in one birth, will yield him pleasure during
seven births.
கலைஞர் உரை:
ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்.

 [ads-post]

மு. உரை:
ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.
சாலமன் பாப்பையா உரை:
ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வி, அவனுக்கு ஏழு பிறப்பிலும்எழும் பிறவிதோறும் கூடவே சென்று உதவும்.
மணக்குடவர் உரை:
ஒருவனுக்கு ஒரு பிறப்பிலே கற்ற
கல்வி தானே எழுபிறப்பினும் ஏமமாதலை யுடைத்து. கற்ற கல்வி தானென்று கூட்டுக. இது
வாசனை தொடர்ந்து நன்னெறிக்கண் உய்க்குமென்றது.
பரிமேலழகர் உரை:
ஒருவற்கு – ஒருவனுக்கு, தான் ஒருமைக்கண்
கற்ற கல்வி – தான் ஒரு பிறப்பின்கண் கற்ற கல்வி
, எழுமையும் ஏமாப்பு உடைத்து –
எழுபிறப்பினும் சென்று உதவுதலை உடைத்து. (வினைகள்போல உயிரின்கண் கிடந்து அது
புக்குழிப் புகும் ஆகலின்
,
எழுமையும் ஏமாப்பு உடைத்துஎன்றார். எழுமை – மேலே கூறப்பட்டது(குறள் 62). உதவுதல் –
நன்னெறிக்கண் உய்த்தல்.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments