Homeஅகிலத்திரட்டுஅகிலத்திரட்டு அம்மானை 3901 - 3930 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 3901 – 3930 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 3901 – 3930 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

கயிலாச மீதில் கறைக்கண்டர் பாதமதை
ஒயிலாகப் போற்றி ஒழுங்கா யிருந்தவர்காண்
இருக்குமந்த நாளையிலே எங்களிரு பேர்களையும்
தருக்குகந்த ஈசர் தன்னையவர் வருத்தி
மாயன் மேல்பிறக்க மண்ணுலோ கந்தனிலே
காய மிழந்து காணா துருவெடுத்து
மறைந்திருக் கிறாரெனவே வானோர்கள் சொல்வதினால்
சிறந்தபுகழ் மாயவனுக்குத் தேருஞ் சிங்காசனமும்
மண்டபங்கள் மேடை வாய்த்தநீ ராவிகளும்
பண்டையுள்ள நல்ல பைம்பொன்னிறப் பொற்பதியும்
உண்டுகாண் துவாரகா யுகத்திலே யென்றுசொல்லி
கண்டுகொண்டா னானால் கலியனதை யாண்டுகொள்வான்
முன்போய்த் தானீங்கள் உவரிதனை வருத்தி
இன்பமுள் ளவகைகள் எல்லாமதி னுள்ளேவைத்து
வைகுண்ட ரங்கே வந்தா லிதைக்காட்டி
மெய்கொண்ட வுங்கள் இடத்திலே போவுமென்று
அல்லாதே போனால் அக்கினியா லுங்களையும்
இல்லாதே செய்வார் என்றுசொல்லி வாருமென்று
அனுப்பினா ரெங்களையும் அதற்காக இங்குவந்தோம்
துனுப்பாக வாரிதனைச் சொல்லியே சட்டம்வைத்து
ஏகினோங் கயிலை இடைவழியில் மாநீசன்
தாவி வரக்கண்டு தவலோக மேமறைந்து
கர்ம விதிப்பயனால் கலக்க மிகவடைந்து
தர்மச்சிறப் பில்லாது தலைகவிழ்ந் திருந்தோமென்றார்
அப்போது அச்சுதரும் அந்தமுனி தங்களையும்
இப்போது கூட்டி ஏகின்ற அப்பொழுது
கருங்குரங்கு காரானை கரியகடு வாய்புலியும்
இருங்கருட னூர்வனமும் எறும்புஈ மூட்டைகளும்
கள்ளக் கசடுள்ள கரிய மிருகமதும்
கொள்ளைகொண்ட ஊர்வனமும் குசலான பட்சிகளும்

விளக்கவுரை :

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments