இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 81 – 85 of 130
பாடல்கள்
பாடல்கள்
81. பாழ்வெளியை நோக்கியே தும்பீபற – மாயைப்
பற்றற்றோ மென்றேநீ தும்பீபற
வாழ்விட மென்றெய்தோந் தும்பீபற – நிறை
வள்ளல்நிலை சார்ந்தோமே தும்பீபற.
விளக்கவுரை :
82. எப்பொருளுங் கனவென்றே தும்பீபற – உல
கெல்லாம் அழியுமென்றே தும்பீபற
அப்பிலெழுத் துடலென்றே தும்பீபற – என்றும்
அழிவில்லாதது ஆதியென்று தும்பீபற.
விளக்கவுரை :
குயிலொடு கிளத்தல்
83. கரணங்கள் ஒருநான்கு மடங்கினவே – கெட்ட
காமமுதல் ஓராறும் ஒடுங்கினவே.
சரணங்கள் ஒருநான்குங் கண்டனமென்றே – நிறை
சந்தோஷ மாகவே கூவுகுயிலே.
விளக்கவுரை :
84. உலகமோக் காளமாமென் றோதுகுயிலே – எங்கள்
உத்தமனைக் காண்பரிதென் றோதுகுயிலே
பலமதம் பொய்ம்மை யேயென் றோதுகுயிலே –
எழு
எழு
பவமகன்யே றிட்டோம் நாமென் றோதுகுயிலே.
விளக்கவுரை :
85. சாதனங்கள் செய்தவர்கள் சாவார்குயிலே – எல்லாத்
தத்துவங்கள் தேர்ந்தவர்கள் வேகார்குயிலே
மாதவங்கள் போலும் பலன் வாயாக் குயிலே – மூல
மந்திரங்கள் தான்மகிமை வாய்க்குங்குயிலே.
விளக்கவுரை :




