இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 76 – 80 of 130
பாடல்கள்
பாடல்கள்
76. அன்னையைப் போலெவ்வுயிரும் அன்புடனே காத்துவரும்
முன்னவனைக் கண்டு முத்தியடை புல்லறிவே.
விளக்கவுரை :
சித்தத்தொடு கிளத்தல்
கண்ணிகள்
77. அஞ்ஞானம் போயிற்றென்று தும்பீ பற – பர
மானந்தங் கண்டோமென்று தும்பீ பற
மெய்ஞ்ஞானம் வாய்த்ததென்று தும்பீபற – மலை
மேலேறிக் கொண்டோமென்று தும்பீபற.
விளக்கவுரை :
78. அல்லல்வலை இல்லையென்றே தும்பீபற – நிறை
ஆணவங்க ளற்றோமென்றே தும்பீபற
தொல்லைவினை நீங்கிற்றென்றே தும்பீபற – பரஞ்
சோதியைக் கண்டோமெனத் தும்பீபற.
விளக்கவுரை :
79. ஐம்பொறி அடங்கினவே தும்பீபற – நிறை
அருவே பொருளாமெனத் தும்பீபற
செம்பொருள்கள் வாய்த்தனவே தும்பீபற – ஒரு
தெய்வீகங் கண்டோமென்றே தும்பீபற.
விளக்கவுரை :
80. மூவாசை விட்டோமென்றே தும்பீபற – பர
முத்திநிலை சித்தியென்றே தும்பீபற
தேவாசை வைத்தோமென்று தும்பீபற – இந்த
செகத்தை யொழித்தோமென்று தும்பீபற.
விளக்கவுரை :




