அழுகணிச் சித்தர் பாடல்கள் 36 – 40 of 40 பாடல்கள்
36. வாகாதி ஐவரையும் – ஆத்தாடி
மாண்டுவிழக் கண்டேண்டி
தத்துவங்க ளெல்லாம் – ஆத்தாடி
தலைகெட்டு வெந்ததடி.
விளக்கவுரை :
37. மஞ்சன நீராட்டி – ஆத்தாடி
மலர்பறித்துத் தூவாமல்
நெஞ்சு வெறும்பாழாய் – ஆத்தாடி
நின்றநிலை காணேண்டி.
விளக்கவுரை :
38. பாடிப் படித்து – ஆத்தாடி
பன்மலர்கள் சாத்தாமல்
ஓடித் திரியாமல் – ஆத்தாடி
உருக்கெட்டு விட்டேண்டி.
விளக்கவுரை :
39. மாணிக்கத்து உள்ளொளிபோல் – ஆத்தாடி
மருவி யிருந்தாண்டி
பேணித் தொழுமடியார் – ஆத்தாடி
பேசாப் பெருமையன் காண்.
விளக்கவுரை :
40. புத்தி கலங்கியடி – ஆத்தாடி
போந்தேன் பொரிவழியே
பதித்தறியாமல் – ஆத்தாடி
பாழியில் கவிழ்ந்தேனே.
விளக்கவுரை :
தோற்றம் மொடுக்கம் இல்லா – ஆத்தாடி
தொல் பொருளை அறியார்கள்…
விளக்கவுரை :
(முடிந்தது)




