HomeUncategorizedதிருவள்ளுவர் ஞானம் 1 - 5 of 20 பாடல்கள்

திருவள்ளுவர் ஞானம் 1 – 5 of 20 பாடல்கள்

திருவள்ளுவர் ஞானம் 1 – 5 of 20 பாடல்கள்
காப்பு
1. அண்டம்பிண்டம் நிறைந்துநின்ற அயன்மால் போற்றி!
அகண்டம்பரி பூரணத்தின் அருளே
போற்றி!
மண்டலஞ்சூழ் இரவிமதி சுடரே போற்றி!
மதுரதமி ழோதும் அகத்தியனே போற்றி!
எண்டிசையும் புகழுமென்றன் குருவே
போற்றி!
இடைகலையின் சுழுமுனையின் கமலம்
போற்றி!
குண்டலிக்குள் அமர்ந்து நின்ற குகனே
போற்றி!
குருமுனியின் தாளினையெப் போதும்
போற்றி!
கட்டளைக் கலித்துறை
2. அன்னை யெனுங்கர்ப்ப மதனில்வந் துமதிலேயிருந்தும்
நன்னயமாயய்ப் பத்துத்திங்களு நானகத்
தேயிருந்தேன்
என்ன அதிசயங் காணிவ்வுலகி லேயமைந்த
உன்னதமெல்லா மமைந்தேன் உண்மையைக்
காண்கிலரே.
விளக்கவுரை :
3. அம்புவி தன்னிலேயுதித் தாய்ந்தறி பாடைதன்னை
வம்புலகத் தார்வசிய மாய்க்கைப்
பிடித்தேபிரிந்து
கும்பி தனிலேயுழன்று மக்குண்டலி
பொற்கமலம்
நம்பியிருந்தேன் சிலநாள் ரகசியங்
காண்கிலனே!
விளக்கவுரை :
தரவு கொச்சகம்
4. அண்டரண்ட வான்புவியும் ஆகமத்தி னுட்பொருளும்
கண்டிதமா யான்விளங்குக் காயமதி
லேயறியும்
வண்டரெனை நீசனென்ற வாறுதனை
யேயொழித்தேன்
விண்டரக சியந்தன்னை விளக்கமது
காண்கிலரே.
விளக்கவுரை :
5. வையமதி லேயுதிக்கு மாண்பர்கனே யுங்களுயிர்
மெய்யென் றிருந்தசைவு வெளிப்படுவ
தென்னவிதம்
?
அய்யமில்லா வாழ்ந்துலகில்
ஆண்மையாய்ப் பூண்டமதிப்
பொய்யெனுமிவ் வாழ்க்கையது
போகுஞ்சுடு காடுளதே!
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments