HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 4796 - 4800 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 4796 – 4800 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 4796 – 4800 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4796. இருந்தாரே மூன்றுநாள்
ஆறுவேளை எழிலான பிரளயத்தின் மலையினுச்சி
திருந்தமுடன் ஜலஸ்தம்பஞ்
செய்துகொண்டு திரளான நவரிஷியார் இருந்தாரங்கே
பொருந்தவே பிரளயங்கள்
போனபின்பு பொங்கமுடன் நவகோடி சித்தர்தாமும்
வருந்தியே கனைகீழே
யிருந்தசித்தை மார்க்கமுடன் கண்டல்லோ வணங்கிட்டாரே
விளக்கவுரை :
4797. வணங்கியே சமாதிபுரம் நிற்கும்போது வாகான சமாதியது வெடிக்கலாச்சு
இணங்கவே நவகோடி
ரிஷிகள்தாமும் எழிலான சமாதியிடம் பக்கல்நின்றார்
கணமுடனே கழுக்குன்றி
சித்துதாமும் கருவாக எந்தனையும் கண்டபோது
மணங்கமழும் சித்துமுனி
தேவர்தாமும் மார்க்கமுடன் எந்தனை யாரென்றிட்டாரே
4798. என்றுமே கழுக்குன்றி
சித்துதாமும் எழிலாக எந்தனை யாரென்றுகேட்க
வென்றிடவே காலாங்கி
நாதர்தம்மின் வேதாந்த சித்தினது சீஷனென்றேன்
நன்றிபுரிந் தென்னையவர்
சித்துதாமும் நலமுடனே எந்தனுக்கு உபதேசங்கள்
குன்றின்மேல் தானிருந்து
கோடியாகங் குறிப்புடனே எந்தனுக்குக் கூறினாரே
விளக்கவுரை :

[ads-post]
4799. கூறானார் உபதேசம்
யானுங்கண்டு குறிப்புடனே மனதுவந்து குளிகைகொண்டு
மீறிடவே சீனபதியானுஞ்சென்று மிக்கான
மாண்பருக்கு யாவுங்கூறி
தேறிடவே சிலகால மங்கிருந்து
சிறப்புடனே காலாங்கி விடையும்பெற்று
தூறியே குளிகையது
பூண்டுகொண்டு துப்புறவாய்த் தென்றிசையில் வந்திட்டேனே
விளக்கவுரை :
4800. வந்தேனே
நீலாஞ்சனக்கிரியிலப்பா மகத்தான புலிப்பாணி மைந்தாபாரு
சிந்தைமன மொன்றாகி
மனங்களித்து சிறப்புடனே தென்கூடப் பதியமர்ந்தேன்
பந்தமுடன் குளிகையது
பூண்டுகொண்டு பார்தனிலே கடலோரஞ் சுற்றிவந்து
விஞ்சைபுரி வஞ்சனமாங்
கிரியைக்கண்டேன் விண்ணுலகு கொள்ளாத மகிமைதானே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments