HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 5041 - 5045 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 5041 – 5045 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5041 – 5045 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5041. காணவென்றால் எடுத்தவர்கள்
மாண்பருக்குக் கடிதான பழமதுவும் ரசந்தானப்பா
பூணவே ரசமதுவும்
குறைந்துகாட்டும் புகழான எலுமிச்சம் பழந்தானப்பா
தோணவே திருஷ்டாந்திரங்
கண்டுகொள்ளு தோராமல் சபையார்க்குக்கூறுகூறு
வேணதொரு வுபசாரக்
கள்ளனைத்தான் வேகமுடன் கண்டறிந்து செப்புவாயே
விளக்கவுரை :
5042. செப்பவென்றால் நாவில்லை
பாவுமில்லை ஜெகதலத்தில் உனைப்போல மகுத்துமுண்டோ
ஒப்பவே சபையார்முன்
கள்ளனைத்தான் ஓங்காரமிட்டல்லோ யழைப்பாய்பாரே
தப்பிதங்கள் நேர்ந்ததென்று
மனதிலுன்னி தண்மையுடன் பொருளதனைத் தருவான்பாரு
இப்படியே ஜாலதந்திரத்தினாலே
யென்மகனே பொருளதனை வாங்குவாயே
விளக்கவுரை :

[ads-post]
5043. வாங்கையிலே புத்திமான்
என்றுசொல்லி வார்த்தை சொல்வார் வையகத்திலுன்னையப்பா
தூங்கியே திரியாதே
மைந்தாகேளு துப்புரவாய் நீயுமொரு கெவுளியாவாய்
ஏங்கியே யுனைகண்டால்
எல்லாருந்தான் எழிலுடனே யுந்தமக்கு வணக்கங்கூறி
பாங்கியர்கள் தன்முதலாய்ப்
பரிசுயீவார் பாரினிலே நீயுமொரு சித்தனாமே 
விளக்கவுரை :
5044. சித்தனென்று சொல்லியல்லோ
யுன்னையப்பா சிதாபாசக் கட்டளையை மனதிலுன்னி
பத்தியாய்
திரிகாலப்பூசைசெய்து பலகாலும் சிந்தித்துப் பணிவுகூறி
முத்திபெற நல்வழிக்கு
வாளதாகி முயன்றுமே யெப்போதும் முயற்சிவானாய்
நத்தியே யும்மிடத்தில்
சீஷனாக நாடோறும் பணிவிடைக்கு நிற்பாரே
விளக்கவுரை :
5045. பாரப்பா நெற்பொறியின்
வித்தைசொல்வேன் பாங்கான நெல்லதுவுங் குறுணிகொண்டு
நேரப்பா சீலைதனில்
முடிந்துதானும் நெடிதான சுண்ணாம்புக் காளைதன்னில் 
சீருடனே கிளிஞ்சி
நடுமையந்தானும் சிறப்புடனே வைத்துமல்லோ கிளிஞ்சிமூடி
காருடனே தானவித்து
எடுத்துக்கொண்டு கவனமுடன் முடிச்சதனை யவிழ்த்திடாயே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments