HomeUncategorizedThirukural 389 of 1330 - திருக்குறள் 389 of 1330

Thirukural 389 of 1330 – திருக்குறள் 389 of 1330

Thirukural
389 of 1330 –
திருக்குறள் 389 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : இறைமாட்சி.
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.
Translation:
The
king of worth, who can words bitter to his ear endure,
Beneath
the shadow of his power the world abides secure.
Explanation:
The
whole world will dwell under the umbrella of the king, who can bear words that
embitter the ear.
கலைஞர் உரை:
காதைக் குடையக்கூடிய கடுஞ்சொற்களையும் பொறுத்துக் கொள்கிற பண்பாளரின் அரசுக்குத்தான் மக்களிடம் மதிப்பு இருக்கும்.

[ads-post]

மு. உரை:
குறைகூறுவோறின் சொற்களைக் செவிகைக்கும் நிலையிலும் பொறுக்கின்ற பண்பும் உடைய அரசனது குடைநிழலில் உலகம் தங்கும்.
சாலமன் பாப்பையா உரை:
இடித்துக் கூறும் தகுதி மிக்க பெரியோரின் சொற்கள் தனக்கு ஏற்பன அல்ல என்றாலும் வருவது எண்ணிப் பொறுத்துக் கொள்ளும் பண்புள்ள அரசின்
குடைக் கீழ், இந்த உலகமே தங்கும்.
மணக்குடவர் உரை:
தன் செவி வெறுக்கும்படியாகப் பிறர்
செய்த குற்றங்களைக் கேட்டு வைத்தும்
, அதனைப் பொறுக்கவல்ல குணமுடைய வேந்தனது குடைக் கீழே
உலகு தங்கும். சொற்பொறுக்கும் என்பதற்குப் புரோகிதர் தன்னிடத்துச் சொல்லுஞ்
சொற்களைப் பொறுக்கவல்ல என்பாருமுளர்.
பரிமேலழகர் உரை:
சொல் செவி கைப்பப் பொறுக்கும்
பண்பு உடை வேந்தன் – இடிக்கும் துணையாயினார் சொற்களைத் தன் செவி பொறாதாகவும்.
விளைவுநோக்கிப் பொறுக்கும் பண்புடைய அரசனது
, கவிகைக்கீழ்த் தங்கும் உலகு – குடைநிழற் கண்ணே
தங்கும் உலகம். (
செவி
கைப்ப
என்றதற்கு
ஏற்ப
, இடிக்குந்
துணையாயினார் என்பது வருவிக்கப்பட்டது. நாவின் புலத்தைச் செவிமேல் ஏற்றிக்
கைப்பஎன்றார். பண்பு
உடைமை : விசேட உணர்வினராதல். அறநீதிகளில் தவறாமையின்
, மண் முழுதும்
தானே ஆளும் என்பதாம்.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments