HomeUncategorizedThirukural 404 of 1330 - திருக்குறள் 404 of 1330

Thirukural 404 of 1330 – திருக்குறள் 404 of 1330

Thirukural
404 of 1330 –
திருக்குறள் 404 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : கல்லாமை.
கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்.
Translation:
From
blockheads’ lips, when words of wisdom glibly flow,
The
wise receive them not, though good they seem to show.
Explanation:
Although
the natural knowledge of an unlearned man may be very good, the wise will not
accept for true knowledge.
கலைஞர் உரை:
கல்வி கற்காதவனுக்கு இயற்கையாகவே அறிவு இருந்தாலும்கூட, அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

[ads-post]

மு. உரை:
கல்லாதவனுடைய அறிவுடைய ஒருக்கால் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.
மணக்குடவர் உரை:
கல்லாதானது ஒண்மை மிகவும்
நன்றாயிருப்பினும் அதனை ஒண்மையாகக் கொள்ளார் அறிவுடையார். ஒண்மை யெனினும்
அறிவெனினும் அமையும். இது கல்லாதார் ஒள்ளியாராயினும் மதிக்கப்படாரென்றது.
பரிமேலழகர் உரை:
கல்லாதான் ஒட்பம் கழிய நன்று
ஆயினும் – கல்லாதவனது ஒண்மை ஒரோவழி நன்றாயிருப்பினும்
, அறிவுடையார்
கொள்ளார் – அறிவுடையார் அதனை ஒண்மையாகக் கொள்ளார். (ஒண்மை: அறிவுடைமை
, அது நன்றாகாது, ஆயிற்றாயினும்
ஏரலெழுத்துப் போல்வதோர் விழுக்காடு ஆகலின்
, நிலைபெற்ற நூல் அறிவுடையார் அதனை மதியார் என்பதாம்.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments