குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அரசியல். அதிகாரம் : கல்லாமை.
உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.
Translation:
‘They
are’: so much is true of men untaught;
are’: so much is true of men untaught;
But,
like a barren field, they yield us nought!.
like a barren field, they yield us nought!.
Explanation:
The
unlearned are like worthless barren land: all that can be said of them is, that
they exist.
unlearned are like worthless barren land: all that can be said of them is, that
they exist.
கலைஞர் உரை:
கல்லாதவர்களைக் களர்நிலத்துக்கு ஒப்பிடுவதே பொருத்தமானது. காரணம் அவர்கள் வெறும் நடைப்பிணங்களாகவே கருதப்படுவார்கள்.
[ads-post]
மு.வ உரை:
கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே அல்லாமல் ஒன்றும் விளையாத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.
சாலமன் பாப்பையா உரை:
படிக்காதவர் உடலால் இருப்பவர் என்று சொல்லும் அளவினரே அன்றி, எவர்க்கும் பயன்படாதவர், ஆதலால் விளைச்சல் தராத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.
மணக்குடவர் உரை:
உளரென்னும் அளவினையுடையாரல்லது, பயன்படாத களர்
நிலத்தை யொப்பர் கல்லாதவர். இது, பிறர்க்குப் பயன்படாரென்றது.
நிலத்தை யொப்பர் கல்லாதவர். இது, பிறர்க்குப் பயன்படாரென்றது.
பரிமேலழகர் உரை:
கல்லாதவர் – கல்லாதவர், உளர் என்னும்
மாத்திரையர் அல்லால் – காணப்படுதலான் இலரல்லர் உளர் என்று சிலர் சொல்லும் அளவினர்
ஆதல் அன்றி; பயவாக்
களர் அனையர் – தமக்கும் பிறருக்கும் பயன்படாமையால் விளையாத களர் நிலத்தோடு ஒப்பர்.
(களர் தானும் பேணற்பாடு அழிந்து உயிர்கட்கும் உணவு முதலிய உதவாதது போலத் தாமும்
நன்கு மதிக்கற்பாடு அழிந்து,
பிறர்க்கும் அறிவு முதலிய உதவார் என்பதாம். இதனான் கல்லாதாரது பயன்படாமை
கூறப்பட்டது.)
மாத்திரையர் அல்லால் – காணப்படுதலான் இலரல்லர் உளர் என்று சிலர் சொல்லும் அளவினர்
ஆதல் அன்றி; பயவாக்
களர் அனையர் – தமக்கும் பிறருக்கும் பயன்படாமையால் விளையாத களர் நிலத்தோடு ஒப்பர்.
(களர் தானும் பேணற்பாடு அழிந்து உயிர்கட்கும் உணவு முதலிய உதவாதது போலத் தாமும்
நன்கு மதிக்கற்பாடு அழிந்து,
பிறர்க்கும் அறிவு முதலிய உதவார் என்பதாம். இதனான் கல்லாதாரது பயன்படாமை
கூறப்பட்டது.)




