குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : வினைத்தூய்மை.
பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.
Translation:
Than store of wealth guilt-laden souls
obtain,
obtain,
The sorest poverty of perfect soul is
richer gain.
richer gain.
Explanation:
Far more excellent is the extreme poverty
of the wise than wealth obtained by heaping up of sinful deeds.
of the wise than wealth obtained by heaping up of sinful deeds.
கலைஞர் உரை:
பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து செல்வந்தராக வாழ்வதைவிட, கொடிய வறுமை தாக்கினாலும் கவலைப்படாமல் நேர்மையாளராக வாழ்வதே மேலானதாகும்.
[ads-post]
மு.வ உரை:
பழியை மேற்கொண்டு இழிதொழில் செய்து பெறும் செல்வத்தை விடச் சான்றோர் வினைத்தூய்மையோடிருந்து பெறும் பொல்லாத வறுமையே சிறந்தது.
சாலமன் பாப்பையா உரை:
பழியை ஏற்று அடைந்த செல்வத்தைக் காட்டிலும், பெரியோர் அனுபவிக்கும் வறுமையே உயர்ந்தது.
மணக்குடவர் உரை:
பழியைச் சுமந் தெய்திய
ஆக்கத்தினும், சான்றோர்
மாட்டு உளதாகிய மிக்க நல்குரவே தலைமையுடைத்து. மேற்கூறியவாறு செய்யின் நல்குரவு உளதாகு மென்றார்க்கு
இது கூறப்பட்டது.
ஆக்கத்தினும், சான்றோர்
மாட்டு உளதாகிய மிக்க நல்குரவே தலைமையுடைத்து. மேற்கூறியவாறு செய்யின் நல்குரவு உளதாகு மென்றார்க்கு
இது கூறப்பட்டது.
பரிமேலழகர் உரை:
பழி மலைந்து எய்திய ஆக்கத்தின் – சாலாதார் தீய
வினைகளைச் செய்து அதனாற் பழியைத் தம்மேற் கொண்டு பெற்ற செல்வத்தின்; சான்றோர் கழி
நல்குரவே தலை – அதுமேற்
கொள்ளாத சான்றோர் அனுபவிக்கும் மிக்க நல்குரவே உயர்ந்தது. (நிலையாத
செல்வத்தின் பொருட்டு நிலையின பழியை மேற்கோடல் சால்போடு இயையாமையின், ‘சான்றோர்
கழிநல்குரவே தலை‘ என்றார்.)
வினைகளைச் செய்து அதனாற் பழியைத் தம்மேற் கொண்டு பெற்ற செல்வத்தின்; சான்றோர் கழி
நல்குரவே தலை – அதுமேற்
கொள்ளாத சான்றோர் அனுபவிக்கும் மிக்க நல்குரவே உயர்ந்தது. (நிலையாத
செல்வத்தின் பொருட்டு நிலையின பழியை மேற்கோடல் சால்போடு இயையாமையின், ‘சான்றோர்
கழிநல்குரவே தலை‘ என்றார்.)




