குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : வினைத்திட்பம்.
எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு.
Translation:
The world desires not men of every power
possessed,
possessed,
Who power in act desire not,- crown of all
the rest.
the rest.
Explanation:
The great will not esteem those who esteem
not firmness of action, whatever other abilities the latter may possess.
not firmness of action, whatever other abilities the latter may possess.
கலைஞர் உரை:
எவ்வளவுதான் வலிமையுடையவராக இருப்பினும் அவர் மேற்கொள்ளும் செயலில் உறுதியில்லாதவராக இருந்தால், அவரை உலகம் மதிக்காது.
[ads-post]
மு.வ உரை:
வேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும், செய்யும் தொழிலில் உறுதி இல்லாதவரை உலகம் விரும்பிப் போற்றாது.
சாலமன் பாப்பையா உரை:
எத்தனை வகை உறுதி உடையவராக இருந்தாலும் செயல் உறுதி இல்லாதவரை உயர்ந்தோர் மதிக்கமாட்டார்.
மணக்குடவர் உரை:
கருவி முதலான வெல்லாவற்றானும் திண்மை
பெற்றவிடத்தும் வினையினது திண்மையை விரும்பாதாரை உலகத்தார் விரும்பார். பலபொருளும்
அமைதியும் உடையார்க்கு வினைத்திட்பமின்றானால் வருங்குற்ற மென்னை யென்றார்க்கு இது
கூறப்பட்டது.
பெற்றவிடத்தும் வினையினது திண்மையை விரும்பாதாரை உலகத்தார் விரும்பார். பலபொருளும்
அமைதியும் உடையார்க்கு வினைத்திட்பமின்றானால் வருங்குற்ற மென்னை யென்றார்க்கு இது
கூறப்பட்டது.
பரிமேலழகர் உரை:
வினைத்திட்பம் வேண்டாரை – வினைத்திட்பத்தை
இது நமக்குச் சிறந்தது என்று கொள்ளாத அமைச்சரை; எனைத்திட்பம் எய்தியக்கண்ணும் – ஒழிந்த
திட்பங்கள் எல்லாம் உடையராயவிடத்தும்; வேண்டாது உலகு – நன்கு மதியார் உயர்ந்தோர். (மனத்தின்கண்
திட்பமில்லாதார்க்குப் படை,
அரண், நட்பு
முதலியவற்றின் திட்பங்களெல்லாம் உளவாயினும், வினை முடியாதாம், ஆகவே, அவையெல்லாம் கெடும் என்பது பற்றி ‘உலகு வேண்டாது‘ என்றார். இதனான்
வினைத்திட்பமில்லாதாரது இழிபு கூறப்பட்டது.)
இது நமக்குச் சிறந்தது என்று கொள்ளாத அமைச்சரை; எனைத்திட்பம் எய்தியக்கண்ணும் – ஒழிந்த
திட்பங்கள் எல்லாம் உடையராயவிடத்தும்; வேண்டாது உலகு – நன்கு மதியார் உயர்ந்தோர். (மனத்தின்கண்
திட்பமில்லாதார்க்குப் படை,
அரண், நட்பு
முதலியவற்றின் திட்பங்களெல்லாம் உளவாயினும், வினை முடியாதாம், ஆகவே, அவையெல்லாம் கெடும் என்பது பற்றி ‘உலகு வேண்டாது‘ என்றார். இதனான்
வினைத்திட்பமில்லாதாரது இழிபு கூறப்பட்டது.)




