HomeUncategorizedThirukural 689 of 1330 - திருக்குறள் 689 of 1330

Thirukural 689 of 1330 – திருக்குறள் 689 of 1330

Thirukural
689 of 1330 –
திருக்குறள் 689 of 1330

thirukural
குறள் பால் : பொருட்பால். குறள் இயல் : அமைச்சியல். அதிகாரம் : தூது.
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சேரா வன்கணவன்.
Translation:
His faltering lips must utter no unworthy
thing,
Who stands, with steady eye, to speak the
mandates of his king.
Explanation:
He alone is fit to communicate (his
sovereign’s) reply, who possesses the firmness not to utter even inadvertently
what may reflect discredit (on the latter).
கலைஞர் உரை:
ஓர் அரசின் கருத்தை மற்றோர் அரசுக்கு எடுத்துரைக்கும் தூதன், வாய்தவறிக்கூட, குற்றம் தோய்ந்த சொற்களைக் கூறிடாத உறுதி படைத்தவனாக இருத்தல் வேண்டும்.

[ads-post]
மு. உரை:
குற்றமானச் சொற்களை வாய் சோர்ந்தும் சொல்லாத உறுதி உடையவனே அரசன் சொல்லியனுப்பிய சொற்களை மற்ற வேந்தர்க்கு உரைக்கும் தகுதியுடையவன்.
சாலமன் பாப்பையா உரை:
தம் அரசு சொல்லிவிட்ட செய்தியை அடுத்த அரசிடம் சொல்பவன், அங்கே சந்திக்க நேரும் ஆபத்திற்கு அஞ்சி, வாய் தவறியும் தவறான செய்தியையோ, இழிவான சொற்களையோ சொல்லிவிடாத ஆற்றல் பெற்றவனாக இருக்க வேண்டும்.
மணக்குடவர் உரை:
தன்னரசன் சொல்லிவிட்ட மாற்றத்தைப்
பகை யரசர்க்குச் சொல்லுமவன் தன்னரசனுக்கு வடுவாகுஞ் சொற்களை மறந்துஞ் சொல்லாத
அஞ்சாமையையுடைய தூதனாவான்
.
பரிமேலழகர் உரை:
விடு மாற்றம் வேந்தர்க்கு
உரைப்பான்
தன்னரசன்
சொல்லிவிட்ட வார்த்தையை வேற்றசர்க்குச் சென்று சொல்ல உரியான்
; வடுமாற்றம்
வாய்சோரா வன்கணவன்
தனக்கு
வரும் ஏதத்திற் கஞ்சி அவனுக்குத் தாழ்வான வார்த்தையை வாய் சோர்ந்தும் சொல்லாத
திண்மையை உடையான்
. (தாழ்வு
சாதி தருமமன்மையின்
, ‘வடுஎன்றார். ‘வாய்சோராஎனக் காரியம்
காரணத்துள் அடக்கப்பட்டது
.)
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments